மூவாறு கண்களு முத்தமிழ் மெய்யாக
மூவீ ரிருதோளு முந்து தமிழுயிராய்ச்செவ்வாய், 28 ஜூலை, 2026
மூவாறு கண்களும் இன்னிசை வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
சனி, 25 ஜூலை, 2026
உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின்
றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை
யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத்
தரங்கமாளு நீர்மையை வரம்புரைத்த லாகுமே
வாடுவார்படி அறு சீர் விருத்தம்(முற்றுமோனை)
வாடு வார்படி வாழ்வெலா
மாது மாயமே மாய்ந்திடா
நேடு நேர்வழி நினைவிலா
நீங்க நேயமே நெஞ்சினிற்
றேடு தீர்வுக டீர்விலை
தெள்ளித் தெளியவே திருவரு
ணாட நல்வழி நல்குவா
ஞால நாகணை நாதனே
வெள்ளி, 24 ஜூலை, 2026
மங்கை எழுசீர் விருத்தம் (சந்தம் முற்றுமோனை)
மங்கை மார்பகம் வாகு வாய்சுனை
வந்த வாதரும் வால்விழி
செங்கை சீர்வளை தேடு சிற்றிடை
திங்க டேர்முகஞ் செவ்விதழ்
தொங்கு தூகுழ றுஞ்சு சோர்வழி
தொய்வில் சுந்தரத் தோள்களுந்
தங்கு தாழ்மனஞ் சங்கு சக்கர
சார்ங்கன் றாளிணை சாருமே
வியாழன், 23 ஜூலை, 2026
மன நிறை வனிதையின் அறு சீர் விருத்தம் (முற்றுமோனை)
மனநிறை வனிதையின் மதுவதோ
மதிநிறை மகிழ்தரும் வடிவதோ
தனநிறை தையலின் றழைவதோ
தனிப்பெருஞ் சார்விலி தமிழதோ
நினைவொழி நெடுநிலை நெகிழ்வதோ
நிகரிலி நிலவொளி நீர்மையோ
வினையொழி வேலவன் மிகையருண்
மிகைமொழி விளம்பினும் விந்தையே
புதன், 22 ஜூலை, 2026
தேவை சிலவுள எழு சீர் மண்டிலம் (முற்றுமோனை)
தேவை சிலவுள சிறுநசை சிலவுள
திருமணஞ் செயவிழை சேயிழையே
நாவி னவின்றெழு நயந்திகழ் நாமமு
நழுவிடை நாயகி ஞான்றுனதே
மேவு மிளிரொளி மின்னிகர் விழிப்பொலி
விழைகணை விடைபெற விழவுறவே
சேவை செயவிழை செல்வனின் சேய்மையைத்
தீர்த்தொழி திருவளர் தேவதையே
செவ்வாய், 21 ஜூலை, 2026
மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை
தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று
மன்னன் வருவான் மணவாளன்
மாலை மார்பன் வடிவேலன்
தென்னன் றிருவாஞ் செந்தமிழின்
சிதையாச் சீராஞ் சிறுபாலன்
நன்னெறி ஞானர் நசையாகு
நான்கு நவிலு நதிபாலன்
என்னை யிணைய வென்றெண்ணி
யிமையா திழந்தே னிளமையையே
திங்கள், 20 ஜூலை, 2026
நாகணை நாதன் முற்றுமோனை அறுசீர் விருத்தம்
தாக(ம்)தீர் தண்ணீர் தந்து
மேக(ம்)தோய் விண்ணின் வீழ்ந்து
வாகுரு மலர்ந்து வைய
செவ்வாய், 14 ஜூலை, 2026
மாலின் மருகோனே (செவ்வாயிற் செவ்வேள்)
மாலின் மருகோனே குறவள்ளி மணவாளா
வானின் குலமீள மலைசாடு கதிர்வேலாஞாயிறு, 12 ஜூலை, 2026
போர் நடத்த சந்த விருத்தம் (பார்த்தசாரதி)
போர்நடத்த வாயுதங்க டேவையில்லை புன்னகை
சீர்நடத்து கீதைசொன்ன தேவதேவ னாயினும்
தேர்நடத்து பாகனாய்த் திறந்தமேனி புண்களைப்
பார்நடத்த வின்றுமேந்து கேணியாளு பரமனே
வியாழன், 9 ஜூலை, 2026
சென்றுதித்து நரசிம்மார் விருத்தம்
சென்றுதித்துத் தூணிலே சிறுவன்வாழப் பண்டுநாள்
வென்றவேந்த கந்தையை யுகிர்த்தெறிந்து வந்தனை
யன்றுதோன்றி யன்றளிக்கு மாளரிக்கு மேலொரு
வின்றுமன்று மென்றுங்கூற வீரமாளு தேவெதோ
புதன், 8 ஜூலை, 2026
அழகே அறுசீர் மண்டிலம்
அழகே யழுக்கா றுறுமழகே
அடியா லளந்தாய் மூவுலகை
கழுகே யதன்மீ தெழுமரசே
கரியி னிடர்தீர்த் தருடேவே
தொழுகே னுனைநீங் கொருவருமே
சுடரா ழிசங்கா முழுமுதல்வா
பழுதாம் வினைநீங் குயர்வுறவே
பகர்வேன் பெயரா யிரமுனதே
செம்பாகம் செவ்வயிற் செவ்வேள்
செம்பாக நங்கைக்குத் தந்தாரின் றீவிழியி
னம்பா லுதித்த வழகுருவே - கொம்பார்மார்பிருந்து எழு சீர் மண்டிலம் (சந்தம்)
மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க லங்க ளீபவள் சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள் போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ ணீ...
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...