அழகே யழுக்கா றுறுமழகே
அடியா லளந்தாய் மூவுலகை
கழுகே யதன்மீ தெழுமரசே
கரியி னிடர்தீர்த் தருடேவே
தொழுகே னுனைநீங் கொருவருமே
சுடரா ழிசங்கா முழுமுதல்வா
பழுதாம் வினைநீங் குயர்வுறவே
பகர்வேன் பெயரா யிரமுனதே
அழகே அழுக்காறு உறும் அழகே - அழகே பொறாமை கொள்ளும் அளவிற்கு அதீத அழகனே
அடியால் அளந்தாய் மூ உலகை - நீ மூவுலகையும் திரிவிக்ரமனாக அளந்தாய்
கழுகே அதன் மீது எழும் அரசே - கருடாழ்வார் மீது நீ என்றும் எழுந்தருள்வாய்
கரியின் துயர் தீர்த்து அருள் தேவே- கஜேந்திரனின் துயர் தீர்த்து அருளிய தேவன் நீயே
உனை நீங்கு ஒருவருமே தொழுகேன் - உன்னை நீங்கி ஒருவரையும் நான் தொழ மாட்டேன்
சுடர் ஆழி சங்கா முழு முதல்வா- சுடர் ஆழியும் சங்கும் கையில் கொண்டவனே முழுமுதற் கடவுளே
பழுதாம் வினை நீங்கு உயர்வு உறவே - பழுதுபடுத்தும் வினைகள் நீங்கி உயற்வு என்பதை வாழ்வில் எட்ட
பகர்வேன் பெயர் ஆயிரம் உனதே - உனது ஆயிரம் நாமங்களைச் சொல்லிக் கொண்டிருப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக