செம்பாக நங்கைக்குத் தந்தாரின் றீவிழியி
னம்பா லுதித்த வழகுருவே - கொம்பார்
குறமக ணாதா குகாகுமரா வென்பார்க்
கறமுகனா யாள்வா யருள்
செம்பாகம் நங்கைக்கு தந்தாரின் - தனது உடலின் செம்மையான பாகத்தை நங்கைக்கு தந்தவரான சிவ பெருமானின்
தீ விழியின் - நெருப்பை உமிழக் கூடிய நெற்றிக் கண்ணின்
அம்பால் - கணை போன்ற விடுத்தலால்
உதித்த அழகு உருவே - அவதாரம் எடுத்த அழகே உருவானவனே
கொம்பு ஆர் குறமகள் - அழகிய கொடியான வள்ளி தேவியின்
நாதா - தலைவனே
குகா - குகனே
குமரா - குமரனே
என்பார்க்கு - என்பவர்களுக்கு
அற முகனாய் - அறத்தின் வழி செல்பவனாய்
ஆள்வான் அருள் - அருளை அளிப்பான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக