சென்றுதித்துத் தூணிலே சிறுவன்வாழப் பண்டுநாள்
வென்றவேந்த கந்தையை யுகிர்த்தெறிந்து வந்தனை
யன்றுதோன்றி யன்றளிக்கு மாளரிக்கு மேலொரு
வின்றுமன்று மென்றுங்கூற வீரமாளு தேவெதோ
பண்டு நாள் சிறுவன் வாழ தூணிலே சென்று உதித்து - முன்னொரு நாளில் சிறுவனாகிய பிரகலாதன் வாழ்வதற்காகத் தூணிலே சென்று உதித்து
வென்ற வேந்து அகந்தையை - யாவரையும் வென்றோம் என்ற அகந்தை மிகுந்த இரணியனின் அகந்தயை
உகிர்த்து எறிந்து உவந்தனை - உனது நகங்களால் கிள்ளி எறிந்து மகிழ்ந்தாய்
அன்று தோன்றி அன்று அளிக்கும் ஆள் அரிக்கு மேல் கூற - அப்போதே தோன்றி அப்போதே கேட்ட யாவையையும் அளிக்கும் வல்லமை உள்ள நரசிம்மருக்கு மேலே சொல்லும்படியாக
இன்றும் அன்றும் என்றும் - அன்றோ இன்றோ அல்லது என்றென்றுமோ
ஒரு ஈரம் ஆளு தே எதோ- மிக்க கருணை கொண்ட ஒரு தெய்வம் எங்கு உள்ளதோ? இல்லை என்பதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக