ஞாயிறு, 12 ஜூலை, 2026

போர் நடத்த சந்த விருத்தம் (பார்த்தசாரதி)

போர்நடத்த வாயுதங்க டேவையில்லை புன்னகை 

சீர்நடத்து கீதைசொன்ன தேவதேவ னாயினும்

தேர்நடத்து பாகனாய்த் திறந்தமேனி புண்களைப்

பார்நடத்த வின்றுமேந்து கேணியாளு பரமனே 

போர் நடத்த ஆயுதங்கள் தேவை இல்லை - பாரதப் போரை நடத்த உனக்கு ஆயுதங்கள் ஏதும் தேவைப் படவில்லை 

புன்னகை சீர் நடத்து கீதை சொன்ன - புன்னகைத்துச் சீரான வழியில் பார்த்தனையும் பிற்கால மனிதர்களையும் நடக்க உதுவும் கீதோபதேசம் சொன்ன 

தேவ தேவன் ஆயினும் - தேவர்களுக்கெல்லாம் தேவனாய் நீ இருந்த போதிலும்

தேர் நடத்து பாகனாய் - பார்த்தனுக்குத் தேரோட்டியாய் 

திறந்த மேனி புண்களை - திறந்த மேனியில் பல புண்களைத் தாங்கி (எதிரிகளின் கணைகளினின்று)

பார் நடத்த- இவ்வுலகை வழி நடத்த 

இன்றும் ஏந்து - இன்றளவும் உன் முகத்தில் தாங்கி நிற்கும் 

கேணி ஆளு பரமனே - திருவல்லிக்கேணி என்னும் திவ்ய தேசம் ஆளும் பரமனன்றோ நீ 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நடத்த சந்த விருத்தம் (பார்த்தசாரதி)

போர்நடத்த வாயுதங்க டேவையில்லை புன்னகை  சீர்நடத்து கீதைசொன்ன தேவதேவ னாயினும் தேர்நடத்து பாகனாய்த் திறந்தமேனி புண்களைப் பார்நடத்த வின்றுமேந்து...