செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

அறுவர் பயந்த வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 அறுவர் பயந்த வறுமுகனை யெண்ண

மறுமையு மிம்மையும் வாய்க்கும் - வெறுமையுந்
துன்பமும் விட்டோடுந் தொய்விலா ஞானமு
மன்பு மலரு மழகு


அறுவர் பயந்த அறுமுகனை எண்ண - ஆறு அன்னைமார்கள் ஆன கார்த்திகை பெண்கள் பாலூட்டி வளர்த்த ஆறுமுகப் பெருமானைச் சிந்திக்க

மறுமை உம் இம்மை உம் வாய்க்கும் - இவ்வுலகும் பின்பு மறுமையும் இரண்டுமே சிறக்கும்

வெறுமை உம் துன்பம் உம் விட்டு ஓடும் - நமது வாழ்வில் வெறுமையும் சரி துன்பங்கள் சரி இருந்த சுவடு தெரியாமல் நம்மை விட்டு ஓடி விடும்

தொய்வு இ(ல்)லா ஞானம் உம் அன்பும் - குறையாத அன்பும் அறிவும்

மலரும் அழகு - நம்மிடம் அழகாக மலரும்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறுவர் பயந்த வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

  அறுவர் பயந்த வறுமுகனை யெண்ண மறுமையு மிம்மையும் வாய்க்கும் - வெறுமையுந் துன்பமும் விட்டோடுந் தொய்விலா ஞானமு மன்பு மலரு மழகு