வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

அம்மான் கொண்டார் இருமாதர் அறு சீர் மண்டிலம்

 அம்மான் கொண்டா ரிருமாதர் 

       பெம்மான் கொண்டா ரணியாறு

செம்மான் மகளைக் களவுகந்து 

     தினைக்கான் றிரிந்தா ரெம்மானுந்

தம்மா னத்தைக் காத்ததற்குத் 

     தம்மா னீந்தார் வானவர்கோ

னம்மான் மயக்க மறுப்பதற்கே 

     யெம்மான் கொண்ட வணியாறே

அம்மான் கொண்டார் இருமாதர் - மாமனாகிய திருமால் திருமகள் மண்மகள் என இரு மாதர்களைக் கொண்டார் 

பெம்மான் கொண்டார் அணி ஆறு - அத்தனாகிய சிவபெருமான் அழகிய ஆறான கங்கையைத் தன்னகத்தே கொண்டார் 

செம்மான் மகளை களவு உகந்து - செம்மானாகிய இலக்குமியின் மகளான வள்ளியம்மையைக் களவின் உகந்து 

எம்மானு உம் தினை கான் திரிந்தார் - எமது தலைவனும் தனது மாமனைப் போன்று மெனக்கெட்டு (பூமா தேவியை மீட்கத் திருமால் முயன்று கடலினின்று பூமியை மீட்டார்) தனது காதலுக்காகப் பயணப் பட்டார் 

தம் மானத்தை காத்ததற்கு - தனது மானத்தைக் காத்ததற்காக 

வானவர் கோன் தம் மான் ஈந்தார்  - மான் போன்ற அழகிய தம் மகளான தெய்வானையை இந்திரன் மணமுடித்து வைத்தார் (எம் தலைவனான முருகப் பிரானுக்கு)

நம் மால் மயக்கம் அறுப்பதற்கே- நாம் மாயையின் உழன்று மயங்குகிறோம் அதனின்று நாம் விடிவு பெற வேண்டும் என்பதற்காகவே 

எம் மான் கொண்ட அணி ஆறே - எமது தலைவரான முருகப் பெருமான் ஆறு படை வீடு கொண்டு அருள் பாலிக்கின்றார் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அம்மான் கொண்டார் இருமாதர் அறு சீர் மண்டிலம்

  அம்மான் கொண்டா ரிருமாதர்         பெம்மான் கொண்டா ரணியாறு செம்மான் மகளைக் களவுகந்து       தினைக்கான் றிரிந்தா ரெம்மானுந் தம்மா னத்தைக் காத்...