வியாழன், 27 ஆகஸ்ட், 2026

மான் மழு கையில் கொண்டான் அறு சீர் விருத்தம்

 மான்மழு கையிற் கொண்டான்

மாதிடம் பாகந் தந்தான்

நான்மறை பொருளாய் நின்றான்

நஞ்சுணுந் தியாகப் பெம்மான்
கூன்பிறை சூடு மெம்மான்

கூத்திடு கோனா மன்றான்
வான்சுடர் மலையா நின்றான்

மான்மயக் கரிவா னன்றே

மான் மழு கையில் கொண்டான் - மானும் மழுவும் தனது கையில் கொண்டவன்

மாது இடம் பாகம் தந்தான் - சக்தியிடம் தனது பாதியைத் தந்தவன்

நான் மறை பொருளாய் நின்றான் - நான்கு வேதங்களின் பொருளாய் நின்றவன்

நஞ்சு உ(ண்)ணும் தியாக பெம்மான் - ஆலஹால விடத்தை உண்டு உயிர்களைக் காத்த தியாகத்து உருவெடுத்த பெருமான்

கூன் பிறை சூடும் எம் மான் - கூன் பிறையை தனது தலையில் சூடும் எமது தலைவனான சிவபெருமான்

கூத்திடு கோன் ஆம் மன்றான் - ஆடலுக்கு அரசனான (நடராஜ) சிதம்பரத் தலத்தில் உறைபவன்

வான் சுடர் மலையா நின்றான் - திருவண்ணாமலையில் வானளவு வளர்ந்த சுடராய் நின்றவன்

மால் மயக்கு அரிவான் நன்றே - எமது மயக்கத்தையும் நன்று களைவான்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மான் மழு கையில் கொண்டான் அறு சீர் விருத்தம்

  மான்மழு கையிற் கொண்டான் மாதிடம் பாகந் தந்தான் நான்மறை பொருளாய் நின்றான் நஞ்சுணுந் தியாகப் பெம்மான் கூன்பிறை சூடு மெம்மான் ...