ஈசன் மீது நேசம் வைப்பார்
ஞானத் தடைவி னாட்டங் கொள்வார்
செய்யுந் தொழிலே தெய்வ மென்பா
ருய்யு மாறு மவனே யென்பார்க்
கோச்சி நின்று மொப்பா வாரே
ஈசன் மீது நேசம் வைப்பார் - இறைவன் மீது அன்பு செலுத்தும் பத்தி யோகம் பயில்வாறும்
ஞானத்து அடைவில் நாட்டம் கொள்வார் - ஞான யோகம் என்னும் முறை பின்பற்றிப் பரம்பொருளை அடைய விழைவாரும்
செய்யும் தொழிலே தெய்வம் என்பார் - கரும யோகம் பயின்று இறை நிலையை எட்ட விழைவாரும்
ஓச்சி நின்றும் - உயர்ந்த நிலையில் நின்றாலும்
உய்யும் ஆறும் அவனே என்பார்கு ஒப்பு ஆவாரே - இறைவனை அடையும் வழியும் அவனே என்றுணர்ந்து முற்றுமாகத் தன்முனைவகற்றி அவனிடம் ஒப்படைப்பார்க்கு ஒப்பு ஆவார்களோ? இல்லை என்பதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக