ஆடிப் பூரத் தவதரத்தா
ளாவி முழுது மாற்களித்தாள்
பாடிக் களிக்கப் பாவைதனைப் பாருக் களித்த பல்வளையா
ணாடித் தவிப்பி னயந்துரைத்தா
ணாதற் காகத் திருமொழியைச்
சூடிக் கொடுத்த சுடர்கொடிதான்
பாரா ணீளை திருமகளே
ஆடி பூரத்து அவதரித்தாள் - திருவாடிப் பூரத்தில் அவதரித்தாள் ஆண்டாள்
ஆவி முழுதும் மால் கு அளித்தாள் - தனது உடல் பொருள் ஆவி அனைத்தும் திருமாலுக்கே அளித்தாள்
பாடி களிக்க பாவைதனை பாருக்கு அளித்த பல் வளையாள் - இவ்வுலகே இன்புற்று இருப்பதற்குத் திருப்பாவையை அவளது கொடையாக அளித்தாள் பல வளைகள் பூணுபவள்
நாடி தவிப்பில் நயந்து உரைத்தாள் - காதல் தவிப்பு என்னும் நிலையிலிருந்து நயத்துடன் உரைத்தாள்
நாதனுக்காக திருமொழியை - நாய்ச்சியார் திருமொழியைத் தனது தலைவனான திருமாலுக்காக உரைத்தாள்
சூடி கொடுத்த சுடர் கொடி தான் பாராள் நீளை திருமகளே - தனது மாலையைச் சூடிப் பின் திருமாலுக்கு அளித்த ஆண்டாளே, முப்பெரும் தேவியர்களான பூமி, நீளா மற்றும் திருமகளின் அம்சம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக