வியாழன், 4 ஜூன், 2026

மூலமானவள் எழு சீர் மண்டிலம்

 மூல மானவள் மூவர் தாயவள் 

        மூன்று பாருமாள் சுந்தரி

கால மாள்பவள் காத லாள்பவள் 

        காவ லாண்மலை மாமகள்
 
கோல மானவள் கோவை யாள்பவள் 

        குன்ற மாள்குகன் றாயவள்
 
சூல மாள்பவள் சொன்ன மேனிய 

       டுன்ப மாய்க்குநம் மன்னையே


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின்         சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள்          வேண்டு வார்துயர் தீர்ப்பவள்   காட்டி னட்...