வெள்ளி, 5 ஜூன், 2026

எழுதாமரைக்கும் எழுசீர் மண்டிலம்

 எழுதா மரைக்கும் பலவா முயிர்க்கு 

         மிணையற்ற வாற்றல் வழங்கும்

எழுதா மறைக்குட் பொருளாய் விளங்கு 

        மிணையற்ற வாற்றற் றலைவன்
 
பொழிவான் மழைக்கு மருளாய் விளங்கும் 

         புலர்வான் வெளுக்கு மொருவன்
 
விழியான் முறைகண் டழைவார் மனத்தி 
 
        லறிவா யுதிக்கு மிளிர்வே 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாகணை நாதன் முற்றுமோனை அறுசீர் விருத்தம்

நாகணை நாதன் ஞான்று       நல்லற ஞால நாட்டத் தாக(ம்)தீர் தண்ணீர் தந்து      தாரணி தழைக்கச் சார்வா மேக(ம்)தோய் விண்ணின் வீழ்ந்து      மெய்த்தவர...