வெள்ளி, 5 ஜூன், 2026

எழுதாமரைக்கும் எழுசீர் மண்டிலம்

 எழுதா மரைக்கும் பலவா முயிர்க்கு 

         மிணையற்ற வாற்றல் வழங்கும்

எழுதா மறைக்குட் பொருளாய் விளங்கு 

        மிணையற்ற வாற்றற் றலைவன்
 
பொழிவான் மழைக்கு மருளாய் விளங்கும் 

         புலர்வான் வெளுக்கு மொருவன்
 
விழியான் முறைகண் டழைவார் மனத்தி 
 
        லறிவா யுதிக்கு மிளிர்வே 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கூடி நின்று (ஸ்ரீ ஜெயந்தி விருத்தம்)

  கூ டி நின்று பாடல் பாடி விழவெ டுக்கு நாளிலே நாடி நின்ற நல்ல ருள்ள நாத னுன்னை யெண்னவே தேடி வந்த குட்ட னாய்நின் சேட்டை காண வல்லமே சீடை யோ...