புலர்வான் சிவக்கப் பரியேழைப் பூட்டிப்
புதிதாக நாளும் வருவான்
மலர்வான் மலர்க ளெழுவா னுயிர்கள் வலமாக நாளும் வருவான்
பலர்வாழ வுண்டி பலவா யளிக்கப்
விலகாத ஞான வொளியாய் விழிக்கும்
பலர்வாழ வுண்டி பலவா யளிக்கப்
பழுதின்றி நாளும் வருவான்
விலகாத ஞான வொளியாய் விழிக்கும்
விழிகாணுந் தேவ னிவனே
புலர்வான் சிவக்க பரி ஏழை பூட்டி - புலரும் வானமானது சிவக்க ஏழு குதிரைகளைப் பூட்டி
புதிதாக நாளும் வருவான் - புதுப் பொலிவுடன் தினமும் வருவான்
மலர்கள் மலர்வான் உயிர்கள் எழுவான் வலமாக நாளும் வருவான் - மலர்கள் மலர்வதற்காகவும் உயிர்களெல்லாம் எழுவதற்காகவும் தினமும் வலமாக வருவான்
பலர் வாழ உண்டி பலவாய் அளிக்க - பல்லுயிர்களும் வாழும் பொருட்டுப் பலவிதமாக உண்டி அளிக்க
பழுதின்றி நாளும் வருவான் - தவறாது நாளும் வருவான்
விலகாத ஞான ஒளியாய் விழிக்கும் - விலகாத அறிவை ஊட்டும் ஒளியாய் நமக்கெல்லாம் ஒளிரும்
விழிகாணும் தேவன் இவனே - கண்கண்ட தெய்வம் ஞாயிறான இவன் தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக