செவ்வாய், 2 ஜூன், 2026

அகந்தை அழிவுற எழுசீர் மண்டிலம்

 அகந்தை யழிவுற வகமலர்ந் தடிதொழ 

           வறிவளித் தருடர லுன்கடனே 

தகுந்த தடைந்திடத் தழைத்திட நற்குலந் 

           தாழ்விலி புகழ்தரு மொழிவளர 

வுகந்து துதிசெய வுரநிறை யுடலுற 

         வுனதிரு தாட்சரண் குறமுகண்மேன்

மிகுந்த வன்புடை விண்ணவர் காவல 

       வினையழி வேலுடைப் பெருமாளே 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின்         சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள்          வேண்டு வார்துயர் தீர்ப்பவள்   காட்டி னட்...