புதன், 3 ஜூன், 2026

திருவினைகள் நீங்கி எழு சீர் மண்டிலம்

 திருவினைக ணீங்கி யொருவழியாய் வாழ்விற் 

         றெளிவுறவே பாதை காண

வருமுயல்வை நாடி யனைத்துலகந் தேடி 

         யாவதொன்று மில்லை காணீர்

திருவுடைய மார்பன் றிகழொளிசே ராழிச் 

         செருத்தொடங்கு சங்கத் தலைவன்

றிருவடியைச் சேருந் திருநமக்குக் கிட்டத் 

        திருவுளமுங் கொள்வா னவனே


திருவினைகள் நீங்கி- நம்முடன் என்றுமே வரும் இருவினைகள் ஆகிய திருவினைகள் நீங்கி

ஒரு வழியாய் வாழ்வில் தெளிவுறவே பாதை காண - ஒரு வழியாக தெளிவு பெற பாதை ஒன்றைக் காண 

அருமுயல்வை நாடி- அருமையான முயற்சியை நாடி 

அனைத்து உலகும் தேடி - எங்கெங்கும் சென்று தேடி

ஆவது ஒன்றும் இல்லை காணீர் - ஆவது ஒன்றுமே இல்லை என்று காண்பீர்

திரு உடைய மார்பன் - திருமகளை தன் மார்பில் வைத்துள்ளவனுமான 

திகழ் ஒளி சேர் ஆழி - ஒளி திகழும் ஆழியைத் தன் கையில் ஏந்தியவனுமான 

செரு தொடங்கும் சங்க தலைவன் - போரைத் தொடங்கி வைக்கும் பாஞ்சசனியம் என்னும் சங்கத்தை தனது மற்றொரு கரத்தில் ஏந்திய தலைவனுமான திருமாலின் 

திருவடியை சேரும் - திருவடிகளை சேரும் வைகுந்த முத்தி என்னும் உயர்வுக்கெல்லாம் உயர்ந்த நிலையை அடைவதற்கும் கூட 

திரு நமக்கு கிட்ட - அப்பெருஞ் செல்வம் நமக்கு கிட்டுவதற்கும் கூட

திரு உள்ளமும் கொள்வான் அவனே - அவனது திருவுள்ளம் இருந்தால் மட்டுமே நிகழும் 

நம் முயற்சியால் ஆவதொன்றும் இல்லை, யாவும் அவன் கருணையே என்பது கருத்து 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின்         சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள்          வேண்டு வார்துயர் தீர்ப்பவள்   காட்டி னட்...