சனி, 25 ஜூலை, 2026

வாடுவார்படி அறு சீர் விருத்தம்(முற்றுமோனை)

வாடு வார்படி வாழ்வெலா 

     மாது மாயமே மாய்ந்திடா 

நேடு நேர்வழி நினைவிலா 

     நீங்க நேயமே நெஞ்சினிற்  

றேடு தீர்வுக டீர்விலை 

     தெள்ளித் தெளியவே திருவரு 

ணாட நல்வழி நல்குவா 

    ஞால நாகணை நாதனே 


மாது மாயமே மாய்ந்திடா - பெண்ணின் மீதுள்ள மயக்கம் அறாதபடி 

நேடு நேர் வழி நினைவு இலா- தேடவேண்டிய நேர்வழியைப் பற்றிய நினைவே இல்லாமல் 

நெஞ்சினில் நேயம் நீங்க - நெஞ்சில் உள்ள நேய குணமும் நீங்கியபடி 

வாடுவார் படி வாழ்வு எலாம் - இவ்வுலக வாழ்க்கை முழுவதும் வாடி உழல்வார்கள் உயிர்கள் 

தேடு தீர்வுகள் தீர்வு இலை - மனிதன் மனம் சென்ற படி தேடும் தீர்வுகள் எல்லாம் தீர்வுகள் ஆகா 

ஞால நாகணை நாதனே - ஞாலத்தை எல்லாம் கட்டிக் காக்கும் நாகத்தின் மீது உறங்கும் நாதா திருமாலே 

தெள்ளி தெளியவே திருவருள் நாட நல்வழி நக்லு வா - அவ்வுயிர்கட்குத் தெளிவு கிட்ட உனது திருவரளை நாட நல்வழியையும் நீயே வந்து அருள வேண்டும் 



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவனே  தரங்கவீசு மோதிமேற் றிரங்களாளு மேற்குண மிரங்குமன்பி லாழ்வதா லிறங்கிவந்து பூதலத் தரங்கமென்ற சீர்பதி யடை...