ஆறு முகமாய்த் தோன்று
மாறு முகமாய்த் தோன்றிக்
கூறு மடியார் துயர்தீர்
கூறு மடியா லவுணர்
நீறு முகமாய் நீத்த
நீறு முகமார் நீத
வேறு முகமாய்ச் செய்யு
மேறு மயில்வா கனனே
ஆறு முகமாய் தோன்றும் - கங்கை என்னும் ஆற்றில் உதித்த
ஆறு முகமாய் தோன்றி - சண்முகங்களோடு தோன்றி
கூறும் அடியார் துயர் தீர் - விண்ணப்பிக்கும் அடியார்களின் துயரைத் தீர்க்கும்
அவுணர் கூறு மடியால் நீறு முகமாய் நீத்த - சூர் முதுலிய அரக்கர்களை வேலாயுதத்தால் கூறிட்டு மடிய நீறாக்கி அழித்த
நீறு முகம் ஆர் நீத - விபூதி அணிந்த அழகிய முகத்துடைய நீதிமானே
ஏறு முகமாய் செய்யும் - அன்பர்கட்கு என்றுமே ஏறு முகம் தான் வாழ்வில் என்ற படி அருள் செய்யும்
ஏறு மயில் வாகனனே - மயிலை வாகனமாய்க் கொண்ட முருகப் பெருமானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக