செவ்வாய், 8 செப்டம்பர், 2026

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா 

       விணையிலதோர் வேலேந்து போர்வீரா 

குழலினிதே மணம்வீசு மலைமகளின் 

        குணபாலா மயிலேறு குகநேயா 

வழுவறியாத் திருமாறன் மருகோனே 

       மடமகளா ரிருபுறமும் புடைசூழ

விழவுகந்த தணிகேசா வெமையாள்வா 

     தொழுமடியார் குறைதீர்க்கும் பெருமாளே  



எழில் அமுதா - அமுதம் போன்ற அழிவில்லாத அழகுடையவனே 

சித்தர் தலைவா- சித்தர்களின் தலைவனே 

எம் ஈசா - எமது கடவுளே 

இணை இலது ஓர் வேல் ஏந்து போர் வீரா - ஒப்பற்ற வேலாயுதத்தை ஏந்தும் போர் வீரனே 

குழல் இனிதே மணம் வீசும் மலைமகளின் குண பாலா - நறுமணம் வீசும் கூந்தலை உடைய மலைமகளான பார்வதி தேவியின் குணம் பொருந்திய குமாரனே 

மயில் ஏறு குக - மயில் ஏறும் குகப் பெருமானே 

நேயா- மிக்க அன்பு கொண்டவனே 

வழுவு அறியா திருமால் தன் மருகோனே - குற்றமற்ற திருமால் தன் மருகனே 

மடமகளார் இரு புறமும் புடைசூழ - தெய்வானை மற்றும் வள்ளி ஆகிய தேவிமார்கள் இரு புறமும் சூழ்ந்து இருக்கும் படியாக 

விழவு உகந்த தணிகேசா - விழாவை உகந்த தணிகாசலத்தின் ஈசனே 

தொழும் அடியார் குறை தீர்க்கும் பெருமாளே - உன்னையே நம்பித் தொழுதேத்தும் அடியார்களின் குறைகளைத் தீர்க்கும் பெருமாளே 

எமை அள் வா- எம்மையும் வந்து ஆள்வாயாக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...