காலனைக் காலா லுதைத்தான் கதிதருநாள்
காலையு மாலையு நள்ளிரவுங் கண்விழித்
தாலவா யண்ணலி னந்தமிலாக் கீர்த்தியைச்
சாலவே யெண்ண றலை
காலனை காலால் உதைத்தான் கதி தரு நாள் - இயமனைக் காலால் உதைத்த சிவபெருமான் கதி அருளும் நாளான சிவ ராத்திரி அன்று
ஆலவாய் அண்ணல் அந்தம் இல்லா கீர்த்தியை - திருவாலவாய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனான சிவபெருமானது முடிவில்லாப் பெருமையை
காலையும் மாலையும் நள் இரவும் கண்விழித்து - காலை மாலை இரவு என முழுதும் கண் விழித்து
சாலவே எண்ணல் தலை - எண்ணுதல் தலை சிறந்தது ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக