உயிர்வலி நீக்கி யுளமகிழ் நாட்டுந்
துயரறக் காக்குஞ் சுடரா - முயர்வாம்பொறுமையின்பு லர்ந்தநற் பூவொளி தேனாய்
மறுமையின்ம லர்ந்தகா தல்
உயிர் வலி நீக்கி உள மகிழ் நாட்டும்
துயர் அறக் காக்கும் சுடராம் - உயர்வாம்
பொறுமையின் புலர்ந்த நல் பூ ஒளி தேனாய்
மறுமையில் மலர்ந்த காதல்
உயிர் வலியை நீக்கி உளத்தின் மகிழ்வை நாட்டும், துயர் அறவே நீக்கிக் காக்கும், உயர்ந்த குணமாகிய பொறுமையின் புலர்ந்த நல்ல பூவில் ஒளிந்திருக்கும் தேனைப் போன்ற மறுமையில் மலர்ந்த காதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக