இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற
வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ
குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள் குறைவில்லை சுற்றமெங்கும் பதைத்தேன் யானே
யுரைதேடு மூமைபோன்று றைந்து போனே
னுயிர்மாண்ட வுடலம்போன் றியக்கம் விட்டேன்
கரைதேடு கப்பலென்னைக் காக்குஞ் சோதி
கடவுளருள் காவாக்கால் வாழேன் காணே
தாய் பூனை தனது குட்டியைக் காணாமல் தவித்த நிலையில் பாடியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக