இணக்கமென் றென்று மியல்பினை விட்டுத்
தணிக்கவே சற்றும் பணியாதே யோம்பு
குணக்கடல் கூற்றா யகம்
இணக்கம் என்று என்றும் இயல்பினை விட்டு - பிறருடன் இணங்கி இருக்கவேண்டும் என்பதற்காக எந்நாளும் இயல்பினைத் தொலைத்து
தணிக்கவே சற்றும் பணியாதே - மன விருப்பம் இன்றி சூழ்நிலையைத் தணிக்கும் ஒரே காரணத்திற்காகப் பணிதல் கூடாது
குணக்கடல் கூற்றாய் அகம் ஓம்பு - குணக்கடலான இறைவனுடைய கூற்றாய் நமது அகமும் அதில் விளையும் இயல்பு படைக்கப்பட்டுள்ளது, அதை அந்நிலையில் வைத்துப் போற்றுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக