கற்பனைக் கெட்டாக் கருவுரு கந்தன்றன் பொற்பதம் பற்றப் புனைகவிதை யாறனைய வற்பற்குந் தோன்று மகத்து
கற்பனைக்கு எட்டா கரு உரு- கற்பனைக்கு எட்டாத கருத்தாக இருப்பதுவும், அது உரு கொண்டு வெளிப்படுவதுவும் ஆகிய
கந்தன்றன் பொற்பதம் பற்ற - கந்தக் கடவுளது பொன் போன்ற பாதங்களைப் பற்றிட
புனை கவிதை ஆறு அனைய - புனையப் படும் கவிதைகள் ஆற்றைப் போன்று கட்டுக்கடங்காது
அற்பன்கும் அகத்து தோன்றும் - சிறியவனுக்கும் தன் அகத்தே வெளிப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக