புதன், 4 பிப்ரவரி, 2026

அறம் குறள் வெண்பாக்கள்

அறத்தின் வழிநடந் தாற்றுஞ் செயலே

நிறைத்த வகத்தைத் தரும்



உரத்தி னுறுதி பயக்கு மறமே

பரத்தின் விழைவுந் தரும்


அடக்க மமைதி யளவிலா வாற்ற

றொடுத்துத் தருவ தறம்


பலவகைச் செல்வம் படைத்த வுலகிற்

றலைவழி யென்று மறம்


மறத்தின் மலிந்த செயறரு மாண்பு

மறத்தின் வழியே தகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கனிதரு சுவையோ எழுசீர் மண்டிலம்

கனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ         கடும்வெயில் பின்வரு மழையோ  பனிதரு நிலவின் பதைவழி யொளியோ          படர்ந்தொளிர் பால்வெளி யழகோ  சுனைதரு மண...