காலனைச் சாடுநற் காலனைச் சித்தமா
மூலனை யாட்கொண்ட மூலனைச் - சூலைதீர்
சூலனைச் சொல்வதன்றோ சொல்
காலனை சாடும் நல் காலனை - மார்க்கண்டேயரைக் காப்பாற்ற காலனைக் காலால் உதைத்த நல்ல கதி அளிக்கும் பாதம் உடையவனை
சித்தர்களின் பெருமை மிக்கவரான சுந்தரநாதரை திருமூலராக்கி ஆட்கொண்டு திருமந்திரம் தமிழ் செய்ய வைத்த அனைத்திற்கும் மூலமாக விளங்குபவனை
சூலை தீர் சூலனை - திருநாவுக்கரசருக்குச் சூலை நோயைத் தீர்த்து அருள் பாலித்த சூலாயுதம் கொண்ட சிவபெருமானை
சொல்வது அன்றோ சொல் - விவரிப்பது தானே சொல், பிற யாவும் சொல்லென்று அடங்குமா? அடங்காது என்பதாம்
சிவபெருமானின் அடியார்க்கு அருள் பாலிப்பதில் உள்ள மிக்க கருணை குணத்தையும், மூலன் என்ற சொல்லால் பரத்துவத்தையும் இப்பாடல் கூறுகிறது. அத்துடன் அடியார் சரிதையும் சில கூறப்பெற்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக