வியாழன், 19 பிப்ரவரி, 2026

காலனை சாடு நற் காலன் சிந்தியல் வெண்பா

காலனைச் சாடுநற் காலனைச் சித்தமா

மூலனை யாட்கொண்ட மூலனைச் - சூலைதீர்

சூலனைச் சொல்வதன்றோ சொல்



காலனை சாடும் நல் காலனை - மார்க்கண்டேயரைக் காப்பாற்ற காலனைக் காலால் உதைத்த நல்ல கதி அளிக்கும் பாதம் உடையவனை 


சித்தர்களின் பெருமை மிக்கவரான சுந்தரநாதரை திருமூலராக்கி ஆட்கொண்டு திருமந்திரம் தமிழ் செய்ய வைத்த அனைத்திற்கும் மூலமாக விளங்குபவனை 


சூலை தீர் சூலனை - திருநாவுக்கரசருக்குச் சூலை நோயைத் தீர்த்து அருள் பாலித்த சூலாயுதம் கொண்ட சிவபெருமானை

சொல்வது அன்றோ சொல் -  விவரிப்பது தானே சொல், பிற யாவும் சொல்லென்று அடங்குமா? அடங்காது என்பதாம் 


சிவபெருமானின் அடியார்க்கு அருள் பாலிப்பதில் உள்ள மிக்க கருணை குணத்தையும், மூலன் என்ற சொல்லால் பரத்துவத்தையும் இப்பாடல் கூறுகிறது. அத்துடன் அடியார் சரிதையும் சில கூறப்பெற்றன 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஐயற்கும் ஆசான் வெண்பா

 ஐயற்கு மாசானாய் நிற்கு மழகுருவிற் பொய்யர்க்குச் சற்றும் புலப்படான் பற்றறுத்த மெய்யர்க்கே மெய்வீட்டின் பேறருள்வான் - வையர்க்கும் வானோர்க்கும...