வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

மங்கைக்கு இடம் தந்து நேரிசை சிந்தியல் வெண்பா

 மங்கைக் கிடந்தந்து மானைக் கரங்கொண்டு 

கங்கைக் களித்த கதியதனா - லங்கை

யரிக்கொப்பான் கார்மிடற் றான் 



மங்கைக்கு இடம் தந்து - சிவ பெருமான் தனது இடப் பாகத்தை பார்வதி தேவிக்குத் தந்தார், திருமால் தனது மார்பில் திருமகளுக்கு இடம் தந்தார்

மானைக் கரம் கொண்டு- மானைத் தன் கையில் ஏந்தியவர் சிவபெருமான், மானைத் தன் கையால் அம்பெய்திக் கொண்டார் இராமனாய்த் திருமால் 

கங்கைக்கு அளித்த கதி அதனால் - கங்கைக்கு ஓங்கி உலகளந்த திரிவிக்கிரமனாகத் திருமால் தனது திருவடியால் கங்கையைப் புனிதமாக்கினார். சிவபெருமான் கங்கைக்குத் தன் சடாமுடியில் இடமளித்துப் புனிதமாக்கினார், ஆகையினாலே 

அங்கை அரிக்கு ஒப்பான் கார் மிடற்றான் - அழகிய கரம் கொண்ட திருமாற்கு ஒப்பானவன் கரிய மிடற்றை உடைய சிவபெருமான் 

ஈற்றடியை "அரற்கொப்பான் பாம்பணை யான்" என்றும் அமைக்கலாம் 


mangaik kidandhandhu mAnaik karangoNdu 

gangaik kaLiththa gadhiyadhanAl angai

yarikkoppAn kArmidaR RAn

By virtue of granting place to their women (Shiva gave half of his side ie left side to Uma and Vishnu gave his vakshasthala or the heart to Lakshmi), by taming the deer  with the hand(Shiva has a deer in his hand and Vishnu as Rama chases and kills maareecha the asura who takes the form of a deer) and by granting esteem to Ganga(As Trivikrama when Vishnu measures the heavens his feet purifies Ganga, and Shiva holds Ganga in his matted locks and sanctifies it) Hari who has beautiful hands and Hara who has darkened throat are equals.

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செவ்வேடன் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 செவ்வேடன் சீர்த்தியைச் செந்திமிழாற் செப்பற்குச் செவ்வேடன் செவ்வாயிற் சீரருளச் - செவ்வேடாம் வாயலருஞ் சொல்லெல்லா மாற்றறியா மாந்தர்க்கும் வாயல...