வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

இடைவிடா சிந்தியல் வெண்பா

இடைவிடா தேக்க நிலைமறக்கு மேதங்  

கொடையென்பர் கொண்டார் குறிப்பிற் - கடைகாணிற் 

காதல் கடவுளுக் கொப்பு

இடைவிடாது ஏக்கம் - இடைவிடாது ஏக்கத்தைத் தரும்

நிலை மறக்கும் ஏதம் - தன்னிலை மறக்கும் குற்றத்தைத் தரும்

குற்ப்பில் கொடை என்பர் கொண்டார்- என்றாலும் இந்நிலையைக் கொடை என்று சொல்வர் அதனை அனுபவித்தார் அதைக் குறிக்கும் போது

கடை காணில் காதல் கடவுளுக்கு ஒப்பு - இறுதி வரை சென்று பார்த்தால் காதலும் கடவுளும் ஒன்றாய் இருக்கும் 

idaividA dhEkka nilaimaRakku mEdhang

godaiyenbar koNdAr kuRippiR kadaikANiR

kAdhal kadavuLuk koppu 

Both create intense longing and leads to the so called fault of forgetting the existence of self, and those who have experienced it say this a big boon in their explanations. So if deeply understood, both  love and God are one!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

  சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற    ...