வஞ்சிக்கண் வைத்தமனம் வேறேது நாடாது
துஞ்சிக்கண் சாய்ந்தாலுந் தூங்காது - நஞ்சீதா
நல்லமுதா நாடவறா வாடவரை யாட்கொளுதே
வெல்லமிது வேம்பைக் குழைத்து
வஞ்சிக்கண் வைத்த மனம் வேறேதும் நாடாது- பெண்ணின் காதலில் மனம் ஈடுபட்டால் அஃது வேறு ஏதின் பக்கமும் திரும்பாது
துஞ்சி கண் சாய்ந்தாலுந் தூங்காது - துஞ்சிக் கண்ணும் உடலும் தூங்கச் சென்றாலும் அம்மனம் தூங்காது எண்ணத்தில் பயணிக்கும்,
நாள் தவறா ஆடவரை ஆட்கொள்ளும் இது நஞ்சா அல்லது அமுதா? - நாள் தவறாது ஆடவரை ஆட்கொள்ளும் இக்காதல் என்னும் அனுபவம் நஞ்சா அல்லது நல்ல அமுதமா
வேம்பை குழைத்து வெல்லம் இது - இது வேம்பைக் குழைத்த வெல்லம் போன்றதாம் .
குழைத்த என்ற பெயரெச்சம் குழைத்து என நின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக