வீடுபெற வேண்டினும் வாழ்வை விழையினுந்
தேடியருள் வள்ளிமலைச் சீருரைப்போம் - வேடர்
மடந்தை யுவந்து மணந்த கடம்ப
னடந்த சிலம்பை நயந்து
வேடர் மடந்தை - வள்ளியம்மை; உவந்து மணந்த கடம்பன்- முருகப்பெருமான்;
நடந்த சிலம்பை நயந்து- வள்ளிமணம் புரிவதற்காக நடந்த மலையை நயந்து
வீடு பெற வேண்டினும் வாழ்வை விழையினும் - வீட்டின்பமோ அல்லது வாழ்வின்பமோ எதனை வேண்டினாலும்; தேடி அருள் வள்ளிமலை சீர் உரைப்போம் - தேடி வந்து அடியார்களுக்கு அருளும் இடமான வள்ளிமலையின் பெருமைகளை உரைப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக