புதன், 18 மார்ச், 2026

வீடுபெற வெண்பா

 வீடுபெற வேண்டினும் வாழ்வை விழையினுந்

தேடியருள் வள்ளிமலைச் சீருரைப்போம் - வேடர்

மடந்தை யுவந்து மணந்த கடம்ப

னடந்த சிலம்பை நயந்து 


வேடர் மடந்தை - வள்ளியம்மை; உவந்து மணந்த கடம்பன்- முருகப்பெருமான்;

நடந்த சிலம்பை நயந்து- வள்ளிமணம் புரிவதற்காக நடந்த மலையை நயந்து 

வீடு பெற வேண்டினும் வாழ்வை விழையினும் - வீட்டின்பமோ அல்லது வாழ்வின்பமோ எதனை வேண்டினாலும்; தேடி அருள் வள்ளிமலை சீர் உரைப்போம் - தேடி வந்து அடியார்களுக்கு அருளும் இடமான வள்ளிமலையின் பெருமைகளை உரைப்போம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின்         சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள்          வேண்டு வார்துயர் தீர்ப்பவள்   காட்டி னட்...