ஓதம் பணிதுயில்வா னும்பர்நல மோயாது
ஓதம் பணி துயில்வான் - பாற்கடலில் திருவனந்தாழ்வான்கண் துயில்பவனான
சூது ஆண்டும் உம்பர் நலம் ஓயாது நாட்டுவான் - எப்பாடுபட்டாவது தனது அடியார்களான உம்பர்கள் நலத்தைப் பேணுபவனான
தூ மலராள் நாதன் - திருமகளின் கேள்வன்
கரி துயரை சக்கரத்து காத்து அருளும் - கஜேந்திரனுக்குத் திருவாழியை வீசி மோக்ஷம் அருளிய
நீள் நா அரவு உயர் கூக்கு ஐயே சரண் - நீண்ட நாவை உடைய திருவனந்தாழ்வான் தனது தலையில் உயர்த்திப் பிடிக்கும் பூமி பிராட்டியின் தலைவனான திருமாலே நமக்குச் சரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக