வியாழன், 19 மார்ச், 2026

நிழல்கனி வெண்பா

நிழல்கனி வேர்தந்து நெடுங்கிளைவீ  டாக்கி

யழல்கொண்டு மட்டமு தாக்கு - மெழில்மிகு

நற்றமிழ் நாட நலஞ்சேர் மரமென்ன

மற்றவர்க்காய் வாழ்வதுவே வாழ்வு

 எழில் மிகு நற்றமிழ் நாட- எழில் மிகு நற்றமிழ் நாட்டவனே;நிழல் கனி வேர் தந்து- நிழல் கனி வேர் என பல கொடைகளை அளித்து; நெடுங்கிளை வீடு ஆக்கி  -  தனது நெடுங்கிளைகள் பல உயிரினங்களுக்கு வீடாக்கி; அழல் கொண்டும் அட்டு அமுது ஆக்கும் - தன்னை நெருப்பில் எரிக்கும் போதும் உணவு சமைக்க உதவியாய் நிற்கும்;நலம் சேர் மரம் என்ன- நலங்களுக்கு இருப்பிடமாக இருக்கும் மரத்தைப் போன்று;மற்றவர்க்கு ஆய் வாழ்வதுவே வாழ்வு - பிறருக்காக வாழ்வதே வாழ்வாகும்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நிழல்கனி வெண்பா

நிழல்கனி வேர்தந்து நெடுங்கிளைவீ  டாக்கி யழல்கொண்டு மட்டமு தாக்கு - மெழில்மிகு நற்றமிழ் நாட நலஞ்சேர் மரமென்ன மற்றவர்க்காய் வாழ்வதுவே வா...