கார்முகில் வண்ணன் மீது
காதலில் வீழ்ந்த பெண்கள்
நீர்முக மாடி நிற்க
நேர்த்தியாய்க் கவர்ந்தா னாடை
சீர்தரு மொப்ப டைப்பைத்
தேர்முகங் கொண்டா னேனோ
ஓர்புக னீயென் பார்க்கே
யுடையுளஞ் சேர்த்தீ தற்கே
கார்முகில் வண்ணன் மீது காதலில் வீழ்ந்த பெண்கள் - கார்முகில் வண்ணனான கண்ணன் மீது காதலுற்ற கோபிகையர்கள்
நீர்முகம் ஆடி நிற்க - நதியின் கண் நீராடி நிற்கும் பொழுது
நேர்த்தியாக ஆடை கவர்ந்தான் - அவர்கள் ஆடையை நேர்த்தியாகக் கவர்ந்துச் சென்றான் அக்கார்முகில் வண்ணன்
சீர் தரும் ஒப்படைப்பை - அனைத்துச் செல்வங்களையும் தரும் ஒப்படைப்பு என்னும் பெருஞ்செல்வத்தை
தேர்முகம் கொண்டான் ஏனோ?- அவர்களிடம் உள்ளதா என்று ஆராய்ந்தான் கண்ணன், இது ஏனோ?
ஓர் புகல் நீயே என்பார்க்கே - நீ தான் எங்களது ஒரே சார்வு என்று சொல்வார்க்கே
உடை உள்ளம் சேர்த்து ஈதற்கு - அபகரித்த உடையை மட்டும் அன்றி தனது உள்ளத்தையும் ஈவதற்கே அத்தேர்வை வைக்கின்றான் கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக