சித்திரை பிறந்து புத்தாண் டொளிரச்
சித்தர் தலைவன் சீரலை வாய்த்தே
பத்தர்க் கருளும் பைந்தமிழ்க் கடவுள்
சித்த மாகம் சீரா னிறைய
வொப்பில் கருணை தப்பா தீந்து
சார்வார் வாழ்விற் சேர்வான் றானே
சித்திரை பிறந்து புத்தாண்டு ஒளிர - சித்திரை மாதமும் புதிய ஆண்டும் பிறந்து ஒளிர
சித்தர் தலைவன் சீரலைவாய் தே - சித்தர் தலைவனும் சீரலை வாய் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தேவனுமான
பத்தர்கு அருளும் பைந்தமிழ் கடவுள்- தனது பத்தர்க்கு அருள் பாலிக்கும் பைந்தமிழ் கடவுளுமான முருகன்
சித்தம் ஆகம் சீரால் நிறைய - தன் பக்தர்கள் சித்தமும் உடலும் செல்வங்களால் நிறையும் படி
ஒப்பில் கருணை தப்பாது ஈந்து - தம் ஒப்பற்ற கருணையைத் தப்பாது அளித்து
சார்வார் வாழ்வை தானே சேர்வான்- தானே வந்து தன்னைச் சார்பவர்களின் வாழ்வில் சேர்வான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக