வெண்ணெய் திருடுஞ் சிறுபிளையா
வேள்விப் பயனாம் பரம்பொருளா
பெண்ணை மயக்கும் பாலகனா
பேய்முலை யுண்ட கோமகனா
மண்ணை விழுங்கு மாதவனா
மாபோர் வென்ற சாரதியா
கண்ணின் மணியா நிற்பவனே
கண்ணா யாவு மானவனே
சூதிற் றோற்றநல் லைவரின் சோர்வ கற்றிய வார்சகன் தூதிற் சென்றனன் மீள்கொளத் தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக