வியாழன், 16 ஏப்ரல், 2026

வெண்ணை திருடும் அறுசீர் மண்டிலம்

 வெண்ணெய் திருடுஞ் சிறுபிளையா

    வேள்விப் பயனாம் பரம்பொருளா 

பெண்ணை மயக்கும் பாலகனா 

    பேய்முலை யுண்ட கோமகனா 

மண்ணை விழுங்கு மாதவனா

   மாபோர் வென்ற சாரதியா 

கண்ணின் மணியா நிற்பவனே 

   கண்ணா யாவு மானவனே

வெண்ணெய் திருடும் சிறு பிள்ளையா- வெண்ணெயைத் திருடி உண்ணும் சிறுவனா இவன்

வேள்வி பயன் ஆம் பரம் பொருளா - வேள்வியின் இறுதிப் பயனாக விளங்கும் பரம் பொருளா இவன்

பெண்ணை மயக்கும் பாலகனா - பெண்களை மயக்கம் அடைய வைக்கும் அழகும் நடையும் கொண்ட இளையனா இவன்

பேய் முலை உண்ட கோ மகனா - பேய்ச்சியாக வந்த அரக்கியின் முலை உண்டு அவளை அழித்த இளங்கோவா

மண்ணை விழுங்கு மாதவனா - அசோதை அன்னையிடம் விளையாட்டாக மண்ணை விழுங்கி பின்பு அவளுக்கு அண்ட சராசரங்களைத் தன் வாயினுள் காட்டிய திருமாலா இவன்

மா போர் வென்ற சாரதியா- மகாபாரதம் என்னும் போரில் நின்று வென்ற அருச்சுனனின் சாரதியா இவன்

கண்ணின் மணியாய் நிற்பவனே - எதுவாக இருந்தாலும் எமக்கு கண்ணின் மணியைப் போல் உயிருக்கு உயிராகி நிற்பவனே

கண்ணா! யாவும் ஆனவனே - கண்ணனே! யாவும் ஆனவனே!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிதரும் அறு சீர் மண்டிலம்

விழிதருங்  காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன  மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன  கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண  ம...