குகனையே தொழுது குதூகல மெய்தி
மகவுசேர் செல்வமு மாண்பும் பெற்றுப்
புகழிகழ் யாவுமே ஒன்றாய்க் காணுந்
தகைமைசெய் தவநெறிச் சால நிற்க
ஆண்டது புதிதெனப் பிறந்தா லென்ன
யாண்டுமே உன்னையே யாறாய்க் கொள்வோம்
காண்டலும் கேட்டலும் கந்தன் நாம
மாண்டவா வாளவே விரைவில் வாவா
கொடியுடைச் சேவலோன் குகனை நாளும்
படியிலே தொழுதிடும் பழுதில் பாங்க
ரடியினைத் தொழுதிடு மகத்தை யருள்வாய்
விடியவே வாழ்வெலாம் வேலா முருகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக