கண்டவர் காணத் துடிப்பவர் கந்தன்
காதலிற் கசிந்தவ ரவர்தந்
தொண்டவர் செல்வம் விழைபவ ரிடராற்
சோர்ந்தவர் செந்தமிழ் நாட்டங்
கொண்டவர் வாழ்வி னழகிய னாடுங்
கொற்றவர் மற்றவ ரேத்தும்
விண்டரும் வேலன் புகழ்சொலே நாளும்
விள்பவர்க் கிணையெது சொல்லே
விழிதருங் காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண ம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக