அரைகுறை ஞான மடரறி வாகும்
வரைகடந் தோங்கு மதியாய்க் - குரைகடல்
சூர்தடிந்த வேலன் றுணையிருக்க மூவுலகில்
ஆர்தடுக்க வாற்ற லுளர்
குரை கடல் சூர் தடிந்த வேலன் துணையிருக்க - ஒலி எழுப்பும் கடலின் கண் சூரனை மாய்த்த வேலாயுதத்தான் நம் துணையிருக்க
வரை கடந்து ஓங்கும் மதியாய் அரை குறை ஞானம் அடர் அறிவு ஆகும் - எல்லையைத் தாண்டி ஓங்கி வளரும் மதியென, அரை குறை ஞானமும் அடர்ந்த அறிவாய் மாறும்
மூ உலகில் தடுக்க ஆற்றல் உளர் ஆர் - மூவுலகிலும் நம்மைத் தடுக்கும் ஆற்றல் ஆருக்கு உளது? இல்லை என்பதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக