வியாழன், 16 ஏப்ரல், 2026

கருவைக் கொல்லும் அறுசீர் மண்டிலம்

கருவைக் கொல்லுங் கணையி னின்று 

         காக்குங் கதிர்மறைத்துப்

பொருவில் சொல்லைப் பொய்யா திருக்கப் 

        போற்று மாழியனை

உருவி லருவி லுணர்வா லுடலா 

         லுணரு மடியர்தமை

இரவும் பகலு மிமையா தேத்து 

        மிசைவைக் கொண்மனனே

கருவை கொல்லும் கணையின் இன்று காக்கும் - பரிக்‌ஷித் கருவில் இருக்கும் போது பிரமாஸ்திரம் ஏவி அழிக்க முயன்றான் அசுவத்தாமன், அதனின்று கருவை காப்பதுமான 

கதிர் மறைத்து பொருவில் சொல்லை பொய்யாது இருக்க போற்றும் ஆழியனை- சூரியனை மறைத்து அருச்சுனனின் சொல்லைப் பொய்யாகாது (தான் ஜெயத்திரதனைக் கொல்வேன் என்று எடுத்த சபதம்) காத்த சக்கரத்தை உடைய கண்ணபிரானை

உருவில் அருவில் உணர்வால் உடலால் உணரும் அடியர் தம்மை- உடலால் உருவை உணர்ந்து, உணர்வால் அருவை உணர்ந்து என்றும் அவன் எண்ணத்திலே வாழ்வை மேற்கொள்ளும் அடியார்கள் தம்மை

இரவும் பகலும் இமையாது ஏத்தும் இசைவை கொள் மனனே- இரவு பகல் பாராமல் எவ்வேளையும் தூக்கும் கூட இன்றி அவ்வடியார்களின் புகழையே சாற்றும் இசைவை கொள்வாய் மனனே!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிதரும் அறு சீர் மண்டிலம்

விழிதருங்  காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன  மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன  கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண  ம...