அமரரின் றுயரற வழிசெயு
மருமறை யனுதினந் துதிசெயும்
இமயமுங் குமரியுந் தனதெனு
மிணையிலி திருவிடந் துதிசெயும்
உமையொரு பங்கனும் விழிகொள
வுலகினில் வரவழை குழந்தையின்
சுமையறு கதிதரு திருவடி
தொழுவரைத் துதிசெய விழைவமே
அமரரின் துயர் அற வழி செய்யும் - நித்ய சூரிகளின் துயரை இல்லாத படிச் செய்யும்
அரும் மறை அனுதினம் துதி செய்யும் - அருமறைகளை ஆகிய வேதங்கள் என்றும் துதி செயாநிற்கும்
இமயமும் குமரியும் தனது என்னும் இணையிலி திரு இடம் துதி செய்யும்- இமயம் முதல் குமரி வரை தன்னகத்தே அடக்கி வைத்துள்ள பாரத நாடு போற்றும்
உமை ஒரு பங்கனும் விழி கொள்ள உலகினில் வரவு அழை குழந்தையின் - உமை ஒரு பங்கனான சிவபெருமானும் காண வேண்டும் என்ற ஆசையினால் உலகிற்கு வரவழைத்த குழுந்தையாகிய கண்ணனின்
சுமை அறு கதி தரு திருவடி - சுமைகளை அறுக்கும் மற்றும் வீடளிக்க வல்ல திருவடிகளை
தொழுவாரை துதி செய்ய விழைவமே - தொழும் அடியார்களை நாம் போற்ற விழைவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக