கனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ
கடும்வெயில் பின்வரு மழையோ
பனிதரு நிலவின் பதைவழி யொளியோ
படர்ந்தொளிர் பால்வெளி யழகோ
சுனைதரு மணமோ சோர்வொழி யமுதோ
துணைவரு துகளொழி திருவோ
மனமகிழ் காதன் மாண்புரை செய்தல்
வைகலும் புதுமொழி வகையே
(காதல் என்பது) கனி தரும் சுவையோ? கவி தரும் மகிழ்வோ? கடும் வெயிலுக்குப் பின் வரும் மழையோ? பனியைப் பொழியும் நிலவின் பதைவை அழிக்கும் ஒளியோ? படர்ந்து ஒளிரும் பால்வெளியின் அழகோ? சுனை தரும் மணமோ? சோர்வை அழிக்கும் அமுதமோ? துணைவரும் குற்றங்களை அழிக்கும் செல்வமோ? மனத்தை மகிழ்விக்கும் காதலின் மாண்புகளை உரைப்பது என்பது தினமும் ஒரு புதிய மொழியால் உரைக்க வல்லது அன்றோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக