அகந்தையென்னுஞ் சேற்றை யறக்களைவா னாளு
மருமறைகள் போற்று மிறைவன்
சுகந்துறந்து நாளுஞ் சினமொழித்த முனிவர் சுகந்தனையே யெண்வார் நெஞ்சி
லகந்திகழு மாலை வனுபவிக்க நாமு
மருந்தவத்தா ரில்லை யெனினு
முகுந்தனதே யாவு மெனவுணர்ந்து கொண்டான்
மூவுலகுந் தருவான் காணே
அகந்தை என்னும் சேற்றை- அகந்தை என்னும் உயிர்கட்கு ஒட்டிக் கொண்டிருக்கும் மலத்தை
அற களைவான் நாளும் - இல்லாதபடி களைவான் என்றும்
அருமறைகள் போற்றும் இறைவன் - அரும் மறைகள் போற்றும் இறைவன்
சுகம் துறந்து நாளும் - இவ்வுலக சுகத்தை தினசரி துறந்து
சினம் ஒழித்த முனிவர்- சினம் என்னும் உணர்ச்சியை முற்றிலுமாக ஒழித்த முனிவர்கள்
சுகந்தனையே எண்வார் நெஞ்சில் - நறுமணம் வீசுபவனான (திருமாலையே) நெஞ்சில் தியானித்துக் கொண்டு இருப்பார்கள்
அகம் திகழும் மாலை- அனைத்து உயிர்களுக்கும் அந்தர்யாமியாக வசிக்கும் திருமாலை
அனுபவிக்க நாமும் - உண்முகமாய் அனுபவிக்க
அரும் தவர்கள் இல்லை எனினும் - அரும் தவத்தைச் செய்ய வல்லார்கள் என்ற போதிலும்
முகுந்தனதே யாவும் - அனைத்துலகும் அனைத்து உயிர்களும் முகுந்தனதே
என உணர்ந்து கொண்டால் - என்று உணர்ந்து கொண்டால்
மூ உலகும் தருவான் காணே - அவன் அவனது உடைமைகளான மூன்று உலகங்களையும் நமக்கு அளிப்பதற்கு அணியாக இருப்பான் காணீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக