விநாயகர் மீது நான்மணி மாலை தொடுக்க ஒரு சிறு முயல்வு
வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை வாக்கிற் கருணகிரி வாழ்ந்த தண்ணாமலை -கலி விருத்தம்
வஞ்சிக் கொடியி னெஞ்சத் துறையும்
வந்தித் தருளு நந்திக் குமரன்
மன்றத் தமருங் குன்றத் தலைவன்
மன்னித் தருளும் கன்னித் தமிழன் புகழ்பாட
செஞ்சொற் றரவே சிந்தை புகவே
தெள்ளத் தெளிவாய் வள்ளி மலைவாழ்
உள்ளத் துறையும் வெள்ளத் தமிழால்
செல்லத் துறவி மெல்லப் புனைந்த கவிபாடி
வஞ்சத் துறையும் நெஞ்சைத் துலக்கி
வண்ணக் கவியின் பண்ணைச் செபிக்க
அன்னைத் தமிழின் கன்னற் சுவையை
அங்கத் துறைய அள்ளிப் பருக அருளாயே
கஞ்சத் தமரும் வஞ்சித் தழுவும்
நெஞ்சத் துடைய நந்தன் மகனின்
கொஞ்சித் திரியும் அங்கண் மகளின்
நெஞ்சத் தணையும் சென்னிக் கிரிவாழ் பெருமாளே
மாரனை நாடாது வாலிபம் வேறேது
மாதுளம் காணாது மானுட வாழ்வேது அதுபோலே
சூரனை போரூடு சூடிய வேலோனை
தூமலர் தாளோனை தாரணி மார்போனை மனதாலே
காருமை பாலோனை கார்த்திகை மேலோனை
காதலில் சேராமல் கானகம் போவேனோ ஒருநாளே
பாரலை ஓயாத பாதகம் நேராத
சீரலை வாயாளும் வானவர் கோமானின் மருகோனே
1.
முப்புரி மாற்று முழுமதி நாளில் மனமுருகி முப்புரஞ் செற்ற முழுமுதற் கேள்வன் உளநிறுத்தி அப்பணி நாத னழகுக் குமர னடிதொழுதே ஒப்பிலி பத்தி யுருகொளச் செய்வா யுளத்தினிலே
ஆறுமுக வாதி குருநேரில் தடுத்தாள ஆலயத்தின் மேலு யரகீழுங் குதித்தாயே வேறுலக பாடு திறனேரி லளித்தானே வேலவனை ஓது மனநாளும் பணித்தானே நூறுகவி வானு லகிலாரு முனைப்போலே நுட்பமிகு நாலு கவிபாட முனைவாரோ மாறுமன தாம ழியவாராய் குருநாதா மாணவனு வேல வனையேத்த வகைதாநீ
ஏது மற்றவர் ஏழை எளியவர்
ஏற்றம் பெற்றிட ஏத மற்றுற வழியாக
ஈரி லற்றவர் ஏக சொற்றவர்
வேத வுத்தமர் மேக வொத்தவர் நிறநாதா
மாதை யற்றதோ ரூறை யற்றுற
ஆழி சூழ்திரு நாட்டின் கொற்றவன் தலைவீழ
வாதிற் செற்றுடன் மாதை மீட்டவி
ராம சந்திர ராஜ தத்துவ புருஷோனே
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...