செவ்வாய், 16 ஏப்ரல், 2024

செருப்பு விளக்குமாறு வெண்பா

செருப்புக்கு நாடா டிறனை யளிதன் விருப்புக் கிடமே விடாத - திருப்புக் கிளையாழ்வான் வாழ்ந்த விணையிலா வூரின் விளையாள்வான் மீள்விளக்கு மாறு 

திங்கள், 15 ஏப்ரல், 2024

கல்யாண கருமாதி சிலேடை வெண்பா

விடுதலை மாயும் விதியெரிப் பாயும் சுடுதலை யேற்கு முடறா - னடுவிற் சரமாரித் தீவேள்வி சார்ந்துரைக் கேட்குங் கருமாதி கல்யாண மொன்று #வெண்பா

 

விடுதலை மாயும் விதி எரிப் பாயும்
சுடுதலை ஏற்கும் உடல் தான் நடுவில்
சரமாரி தீ வேள்வி சார்ந்து உரைக் கேட்கும்
கருமாதி கல்யாணம் ஒன்று  

வியாழன், 11 ஏப்ரல், 2024

வசந்த திலக விஶ்வநாதாஷ்டகம்

விஶ்வநாதாஷ்டகம்


பா வகை (poetic metre): வசந்த திலகா


ஆதிசங்கர பகவத்பாதர் அவர்கள், “வசந்த திலகா” 

என்னும் பாவகையினை வடமொழில் கையாண்டுள்ளார். 

அதே பாவகையை தமிழில் முயன்று 

மொழியாக்கம் செய்யும் ஒரு சிறு முயல்வு.

1.

கங்கைத் திரைச்சடை யணிந்த வணங்கு மானே
மங்கைக் கிடப்புற மளித்த நிரந்தரா வெண்
சங்கைத் தரித்த திருமாற் பிரியா மலர்வே
ளங்கத் தழித்த பர காசி வி விஶ்வநாதா!

புதன், 10 ஏப்ரல், 2024

குமாரசம்பவ விருத்தம்

 ஆறுடுத்து மாலகண்ட ராடவத்தை வானவ
     ராடவைக்க வேளனுப்பி வாளியேவித் தானவர்
சீறொடுக்கத் தேவியொத்துச் சேயுதிக்கக் கூடவே
      தேறமர்ந்து கூடிபேசிச் சீரெடுத்துச் சாரவ
ரூறொழித்து மீளெடுக்க வானிலத்தைத் தானவர்
     நேரெடுத்த வாணவத்தை யேறெடுத்துத் தீயினா
னீறழிக்க  நீலகண்டர் தீவிழிக்க வாறின
     ராறுதிக்கு  மாசிதோன்ற றானுதிக்க  வேண்டுமே

புதன், 3 ஏப்ரல், 2024

பாரதப் பெருமை விருத்தம்

 கரிமுனி பகரக் கரிமுக னெழுதக்
     கடலொலி யெழுப்புங் கலைநதியு

மிருநில முலர விபமுகன் குளிரப்                      
    பெருநிலத் தடியின் மறைந்தோடப்  

பெருவரை யதிரப் பெருமைக ளுணரப்  
    பிறங்கொளி பரவுங் கதிராகக்  

குருவரு ளணுகத்  திருவரு ணுழையக்
    கருமமு முணர வறவாழ்விற்

குருகுல மழியக்  குணவதி மகிழச்  
    செருவிடை யுரையைப் பரந்தாம

னரகுல முயர நடவழி யுணர
    நமதிடை புலரப் பணியானே

வரிவடி வுலகு வகைவகை யுளவும்
    வடிவழ குடனே வடித்தானே

திருவடி யுறையச்  செறுகலி யொழியத்
    தினமுறை தொழுவோ மறைநூலே

மாறன் மடக்கு வெண்பா

மாறான் முழுமுதற் றெய்வமெனப் பாட்டிசைத்த மாறன் றமிழ்செய்த மாமறையே மாறுதித்த மாறான் முழுமுத றெய்வமெனப் பாட்டிசைத்த மாறன் றமிழ்செய்த மாண்பு

மாலவதார வொப்பீடு வெண்பா

மாதுறையு மார்பழகன் மாதரியா யன்றுவந்த மாதறியா தேங்கவைக்கு மாமாயன் - யாதொருவர் மாதிரியே கூறவொணா மாதொருத்தி காத்திடவே சேதமுறச் செய்தவனாந் தீவு #வெண்பா

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...