வானவில் பண்பாட்டு மையம் நடத்திய பாரதி திருவிழாவிற்குச் சென்றதினி மீளாது என்ற தலைப்பில் எழுதிய கவிதை
தயிரெடுத்துத் தின்றபோது வெண்மையான மீசையோ
கயிறெடுத்துக் கண்ணிகட்டக் காயமேவு காயமோ
மயலெடுத்த வாயர்மங்கை சொக்கநின்ற மூர்த்தியோ
செயமுடைத்து விசயன்வெல்லத் தேர்நடத்து பாகனே
பாரதிப வானந்த பன்னறிவுப் பாதைவகு
பாரதப் போரேறே பல்லுலகுந் - தீரறிந்த
வாரிதியே வாழ்த்துரைப்பேன் வையநீ வந்ததினந்
தூரிகையாற் சொல்லை வரைந்து
#வெண்பா #சிலேடை
இம்மை மறுமை யிரண்டு மருள்புரிந்து
நம்மை வழிநடத்து நாயகன் - செம்மை
யுருவன் சிரமா றுடைய னமரு
மொருமயிலை யுள்ளநிறை யோர்ந்து
#வெண்பா
செவ்வாய்த் திருமகனை யெவ்வா றிசைத்துரைக்க
வொவ்வாத வற்றை யொழித்துயர - வவ்வா
றறிந்தா லெடுத்துரைப்பீ ரான்றோர்கா ணானுஞ்
செறிந்த தமிழ்செய்ய சீர்
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...