செவ்வாய், 24 அக்டோபர், 2023
சரஸ்வதி பூஜை
திங்கள், 16 அக்டோபர், 2023
பரதன் இராமரிடம் பாதுகை பெற்றபோது சொல்வதாக
பரதனாள தரணியாவும் விரதமாள புனிதனைப்
பணியுமாறு மணியமான பரிவலாத வனையென
வரதனாரு வனமுமேவ கரடுமேடு பாதையின்
மலரதான பதமுநோவ வரசதாள பாதுகை
மரமதாக மருவிமேவு மசைவிலாத வகமுள
மதியிலாத விதிசொலாலே மனதுவேக வுயிரினை
இரதனாரு மகலுமாறு விதியிராத வேழையா
யிசையிலாத நடனமாக விழிவதானே னானுமே
-எண்சீர் ஆசிரிய விருத்தம்
புதன், 27 செப்டம்பர், 2023
ஏகபாதம்
மாதா தனமுண்ணா மானேர் மறையா மாதா தனமுண்ணா மானேர் மறையா மாதா தனமுண்ணா மானேர் மறையா மாதா தனமுண்ணா மானேர் மறையா #கலிவிருத்தம்
சனி, 23 செப்டம்பர், 2023
வெள்ளி, 22 செப்டம்பர், 2023
மாலைமாற்று
மாலைமாற்று
மாலைமாற்று
கரும வசவா கலவி விலக வாசவ மருக வருக வருடா தொலைவ வலைதொ டாருவ கருவ மருத சைலவா சதப பதச வாலசை தரும வருதி யகதீ திறவ வறதி தீகய திருவ - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
கரும வச ஆ கலவி விலக வாசவ மருக அருக அருள்தா தொலைவ வலைதொடு ஆருவ கருவ மருதசைல வாச தபபத சவால் அசை தரும வருதி அகதீ திறவ அறதி தீ கய திருவ
கரும வினைகளால் ஏற்படும் பந்தங்கள் பாசங்கள் விலக வாசகன் மருகனான ( முருகா) அருக ( மிக அருகில் இருப்பவனே எமதகத்துள்) அருள் தருவாயாக தொலைவ( உன்னை உணராதோர்க்குத் தொலைவிலும் தொலைவானவனே) வலை தொடு ( சூழ்ச்சிகள் ஏவும் மாயைக்கும் ) ஆர் உவ கருவ
( உயர்ந்த களிப்பிலென்றும் திளைப்பவனே , கருவூலமாக இருப்பவனே) மருத மலை வாசனே தவசிகளுக் குயர்பதமாக விளங்குபவனே மனதில் எழும் வினாக்களுக்குப் பிரகாசமாக விளங்கும் தரும சொரூபனே வருவாயாக எமது அகத்தில் உள்ள தீமைகளை நன்று களைக ( திறவ அறதி) அக்கினியால் சரவணப் பொய்கையில் உதித்த மங்களகரமானவனே
எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
-
மாதேவு வேடா மலர்மதி யாறாளா வாதேவு வேலை மலைவில்லா -தீதேகா சத்திநாதா வையாறா சங்கத் தமிழ்வேந்தே முத்திநாதா மூன்றுதமிழ் தா