வையகத்து வாழ்வுகந்து வாழ்ந்திறந்து மெண்ணிலா
மெய்யெடுத்து விட்டொழிந்து விஞ்சிநின்ற தென்கொலோ
செய்யகத்து வாயினின்று சேவைசெய்வ தென்றுதான்
பொய்யகற்று மாமுனிக்கு மெய்யொடுக்கு நெஞ்சமே
புதன், 6 நவம்பர், 2024
வையகத்து கலி விருத்தம் ( மணவாள மாமுனிகள்)
செவ்வாய், 5 நவம்பர், 2024
வானகத்து விருத்தம்
வானகத்த ராவடைந்து வையகத்தை யேற்றவே
வைணவத்தை யாச்ரயித்து மானுடற்க ளுய்யவே
தேனுகுத்த மிழ்மொழிந்து பதேசரத்ன மாலையுந்
தமிழ்மறைக்கு நூறுசாற்றந் தாதிமாலை யமுதமுங்
கோனகத்து வழிவகுக்க மேதினிக்கு நீதர
கோவில்வாழ ரங்கனுன்ற னேற்றமான தனியனை
நானிலத்து மாந்தர்யாவுங் காலகால முள்ளவே
மாமுனிக்குப் போற்றிசைத்த கீரத்திகூற லாகுமோ
எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
பகை கெடுத்து விருத்தம்
பகைகெடுத்து வெல்ல பழவினைகள் செய்யு
மிடர்கெடுக்க வென்று கவசமென நின்ற வொருபாடன்
மிகைபடுத்த லின்றி மிகவெளிது சொல்லா
னிதமுரைக்க சஷ்டி விரதமுற நின்ற வடியார்கள்
வகைபடுத்து வல்லூ ரிளவரசன் றந்த
வரியெடுத்து நின்று முழுவருளுந் தந்த சிறுபாலா
சிகைவுடைத்த செல்வ திருவணிகள் கொண்ட
மிகவுடுத்த லின்றி பழநிமலை நின்ற பெருமாளே
ஒன்பது சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆரூரன் கட்டளைக் கலித்துறை
ஆரூரன் சொல்லா தருளுடை யாசானை யன்றடைந்தே
யாரூரற் சொல்லா லழகுடை நான்மணி மாலைசெய்தே
றாரூரன் சொல்லா தருளு மருஞானஞ் சீரலைவா
யாரூரன் சொல்லா லடைந்த குமர குருபரனே
கட்டளைக் கலித்துறை
திங்கள், 4 நவம்பர், 2024
வாக்கிறந்த விருத்தம்
வாக்கிறந்த பாலன்வாயில் வாரத்தைமேவு கவிதையை
வாழ்த்திநின்ற பாலன்சாயல் வந்துநின்ற நேயவா
பூத்திருந்து பாலன்வாயில் வெண்சிறந்த பாவினை யருள்வோனே
பாக்களால் வைகைவாழு மம்மைபால வார்தமிழ்
பாலனுன் குமாரசாமி பிள்ளையா ரிசைத்தமிழ்
பாதைகாண தருமைசென்று மாசிலாத தேசிகர் பதநாட
நோக்கறிந்து சைவமோங்க தில்லைநாத னாசிபெற்
றூக்கமுற்று வாரணாசி சேத்திரத்த டைந்தபின்
றோத்திரங்கண் மாலைசெய்து சர்வகல்வி வல்லியைத் தமிழாலே
நாக்கறிந்த மொழிகள்யாவும் நொடியுணர்ந்து கோனிட
நானிலத்தை வேட்டடைந்து நாரிபாகர் நெறியினை
நிலைநிறுத்த வன்பருக் கருளளித்த செந்திலாள் பெருமாளே
பதிமூன்று சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
ஞாயிறு, 3 நவம்பர், 2024
மன்றாடி வெண்பா
மன்றாடி மைந்தா மருகாமா மாயற்குக்
குன்றாடி கோலமயிற் கூர்வேலா - வொன்றாக
வுன்னை வுளமுருகி யுள்வார்க் குயிராமே
முன்னை முடியவிழ்ந்த முத்து
#வெண்பா
சனி, 2 நவம்பர், 2024
இலையிரு விருத்தம்
இலையிரு கூறாய் நிலனொடு நீரி
னிடையினில் வீழச் சிவபூசை
நிலையினை யாளு நிறைமுனி வோனும்
பறவையு மீனு மெனமாறு
மிலையினை யாவென் றொருநொடி காண
விடரிட பூசை தடுமாற
யிதனிடை பூதஞ் சிவனடி யாரை
யொருபது நூறு சிறையேக
நிலைதடு மாறி நிசவடி யாருந்
தமிழரு ளாசு புலவோனை
யுலையுறு மாவி பசியுறும் பூத
முளமகிழந் தூணா யெனநோவ
கலைமக ளாளு நயமொழி நாவன்
றிருமுரு காறா யுனையேத்தப்
பிலமுட னேகி பிணைவிடி வித்த
பர(ங்)கிரி வாழும் பெருமாளே
பதினான்கு சீர்க் கழிநெடிலடி #ஆசிரியவிருத்தம்
எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
-
மாதேவு வேடா மலர்மதி யாறாளா வாதேவு வேலை மலைவில்லா -தீதேகா சத்திநாதா வையாறா சங்கத் தமிழ்வேந்தே முத்திநாதா மூன்றுதமிழ் தா