புதன், 29 அக்டோபர், 2025

ஆய்ச்சிமகள்

 ஆய்ச்சிமகள் கண்மணி யாநிரைக் காவலன்

பேய்ச்சிமுலை யுண்மணி பேய்மழைக் காத்தவன்
வாய்ச்சிரிப்பி னேழுலகு மண்ணுடு காண்பித்த
சேய்ச்சிறப்பைச் செப்பவே நா

செவ்வாய், 28 அக்டோபர், 2025

தொலைத்தேனனை விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

தொலைத்தேனெனை மலைத்தேவனி னலர்த்தாமரை யழகில் 

மலைத்தேனவன் சலிப்பேதுமி லமர்ப்போர்க்கள நகைப்பில் 

அலைத்தேவுழ றிரைப்போலுறை யடங்காவென  தகத்தில் 

நிலைப்பேனென நிதங்காத்திடு குகத்தேவனென் வியப்பே 


திங்கள், 27 அக்டோபர், 2025

ஆறாறைத் தாண்டி கட்டளைக் கலித்துறை

ஆறாறைத் தாண்டி யணிதிக ழாண்டி யசைவறியா

நீறானிற் றோன்று நெருப்புரு ஞான்று நிகர்பகர
வேறேது மில்லா விழிவிழை யாற்றை வினயமுடன்
கூறாத நெஞ்சே குறைபிறப் போநீ குவலயத்தே

சனி, 25 அக்டோபர், 2025

வார்த்தையில்லை விருத்தம்

வார்த்தையில்லை பொருளுமில்லை வாஞ்சையில்லை கவியினில்

நேர்த்தியில்லை நளினமில்லை யாப்பறிந்த பயனுமென்

சீர்த்தியில்லை த்ருப்தியில்லை வாசகர்க்குச் சற்றுமே

கார்த்திகேய முத்தமிழ் கடையனுக்கு மருள்வையே 


மாலைநீக்கு விருத்தம்

 மாலைநீக்கு மாலைநீக்க மேன்மைவீடு கிட்டுமோ 

சூலைநீக்கு சூலைநீக்க வாத்மஞான மெட்டுமோ

வேலைநீக்கு வேலைநீக்க விண்ணுமண்ணு மண்டுமோ

ஓலைநீக்கு வாலைநோக்கு போதறிந்திங் குய்மினே 


குறிஞ்சி வாழும் ஆண்டவர் விருத்தம்

 குறிஞ்சிவாழு மாண்டவர்கண் கொஞ்சிபேச வாசையா

செறிந்தஞான மாழ்தவங்க டுறந்தவாழ்க்கை தூநெறி
மறந்திராத மாட்சிபண்ணி சைத்தபாட்டு வேண்டிலை
அறிந்தயாவு மகற்றிவைத்து மன்பையென்றுந் தருகவே

ஆறு சக்கரங்களின் விருத்தம்

 ஆறு சக்கரங்களி னாற்றலான வாண்டவா

ஆறு சொற்பதங்களி னாதியான மூலவா
ஆறு சிற்குணங்களி னாயினேனு முய்யவே
ஆறு சொற்பதங்களை யாற்றவாவெம் மையனே

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...