கறைகொண்ட கண்டன் கனல்வந்த நந்த
கரைவந்தொ டுங்க வழியே
மறைகண்ட விந்தை மறவள்ளி கந்த
மதிவந்தொ டுங்கு மிடமே
மறைவிண்ட கஞ்சற் சிறைகொண்ட பிஞ்சே
மதிகொன்றை சூடி குருவே
குறைகொண்ட வென்னை நிறைகொண்ட மன்ன
தமிழ்கொண்டு ரைப்ப னுனையே
கறைகொண்ட கண்டன் கனல்வந்த நந்த
கரைவந்தொ டுங்க வழியே
மறைகண்ட விந்தை மறவள்ளி கந்த
மதிவந்தொ டுங்கு மிடமே
மறைவிண்ட கஞ்சற் சிறைகொண்ட பிஞ்சே
மதிகொன்றை சூடி குருவே
குறைகொண்ட வென்னை நிறைகொண்ட மன்ன
தமிழ்கொண்டு ரைப்ப னுனையே
ஆதி மூலவ னாழி மாதவ
னானை காத்தவ னன்பைமா
வாதி லாயுத மேந்த வில்லையென்
றேற்ற சூளுரை பொய்த்தவீண்
சூதிலாடவர் தோற்றமாதுள
மெண்ண வக்கண நின்றகூ
றாது போயினு மூது வேய்ங்குழ
னாத னுக்கது லீலையே
ஆடுமாமயின் மீதுலாவிடு மாவினன்குடி காவலா
பாடுவார்பயில் பண்ணிலின்புறும் பைந்தமிழ்ச்சுவை பாவலா
வேடுவார்குயில் வள்ளிதேவியை வேண்டிநாடிடு காதலா
நாடுவார்பயி றீதிலன்பினி னாடுவோமுனை நாதனே
யாதுமாகிய யாதவன்கழ லென்றுபெற்றிட வாழ்விலே தீதுலாவிய மேதினீமய லென்றுவற்றிட வோய்விலே சேதுவாகிய வாதிசேடனை நன்றுபற்றிட மாய்விலே போதுலாவிய வாதிமாமக ளென்றுமுற்றிட வாழ்விலே
நித்தநாதர் நெருப்புதித்த நந்தநந்தன் மருகனே
நிர்த்தநாதர்க் கர்த்தஞ்சொன்ன வர்த்தநாரி நந்தனே
சுத்தமான கங்கதேவி தோன்றுதேவ நாதனே
சித்துலாவு சித்தரேத்து தேவசேனை கேள்வனே
யெத்தனான சூரடங்க வேலெறிந்த சித்தனே
பத்தர்வாழ வர்த்தமீயும் பற்றதான கந்தனே
மித்தைவீழ ஞானமீயும் வேட்டுவச்சி நாதனே
முத்துலாவு மார்பிலங்கு மெங்கணாதர் நாதனே
சத்துசித்து மகிழ்வரூப முத்திநல்கு தத்துவ
புத்தியாளும் பிள்ளையாரின் சுட்டியான தம்பியே
யத்தனாக வன்னையாக வண்ணிற்கு மாண்டவா
நித்தமான நிலையளிக்கு நீயிருக்க வாட்டமே
சிந்தையொன்றி யோகநின்ற சந்தநாதர் வேண்டிடத்
தந்தைதாயை மார்சுமந்து வந்தடைந்து நின்றகு
டந்தையென்ற சேத்திரம டைந்தமேன்மை யாதெனி
லெந்தைபத்தி சாரர்தங்கு மீடிலாத வேற்றமே
சீர் பிரித்து
சிந்தை ஒன்றி யோகம் நின்ற சந்த நாதர் வேண்டிட
தந்தை தாயை மார் சுமந்து வந்து அடைந்து நின்ற குடந்தை
சேத்திரம் அடைந்த மேன்மை யாது எனில்
எந்தை பத்திசாரர் தங்கும் ஈடு இல்லாத ஏற்றமே
Unifying thoughts and all senses the adept in yoga, master of rhythmic verses by his prayers brought Sriman Narayana to this place called Kudandhai(Kumbakonam), due to the fact that he wanted to come as quick as possible to see his
Bhakta, he just carried Sri in his chest and did not wait for his mount Garuda, he stayed there as Bhaktisara Varada, and this place Kudanthai's greatest merit is that BhaktiSara or Thirumazhisai Aazhwar chose to stay here forever!
செவ்வாயிற் செவ்வேளைச் சிந்தித்துச் சீர்பெறவே
யிவ்வாழ்வை யீந்தா னிசைந்திறைவ - னவ்வாறே
யெவ்வாழ்வு மீங்கமையு மென்றறிந்தா லேற்றுவப்போ
மவ்வாழ்வைச் செவ்வாழ்வாய்க் கொண்டு
விதியிருந்தா னல்ல மதியடைந்தாற் கங்கை
நதிமைந்த னாள்வா னினைவு - கதியடைய
வாறுமுக னாரா தருளளிக்குஞ் செந்நாமங்
கூறிதினங் கொள்வோந் தவம்
தற்புகழ்ச்சி யிழிவதென்று சாத்திரங்கள் கூறியுங்
விற்பதற்கு வேறதின்றி தன்னையேபு கழ்வதோ
வற்பனுக்கு வாழ்விலங்க வப்பனைம றப்பதோ
வெற்பெடுத்து மாரிகாத்த வேலைவண்ணற் பணிமினே
சிவனாரின் உடுக்கையிற் பிறந்தாய்ச்
செழிப்பாக ஆல்போல வளர்ந்தாய்த்
தவமாளும் திருநாட்டில் மலர்ந்தாய்த்
தமிழ்ச்சங்க அவைதனிலே குளிர்ந்தாய்
உவமிக்கப் பொருளில்லாத் திகழ்ந்தாய்
உயர்கந்தன் அருளாலே பொலிந்தாய்
நவமென்றும் நலியாது நகைத்தாய்
நகையாக காப்பியங்கள் புனைந்தே
பூனைபோல வாற்றல்சேமி புவனமேழும் வெல்லலா
மானைபோல மதியிருக்க யாருனக்கு வல்லவர்
ஞானிபோல நிலைநிறுத்தி நல்லதல்ல திரண்டையுந்
தானகற்றி யுண்மைகாண நாளுனக்கு வெற்றியே
நாள்கொண்ட மீனு நடுங்க வழகாய் நவமிருக்குங்
கோள்கொண்ட வாற்றலுங் கும்பிட் டளிதரக் கோட்டரையன்
மாள்கொண்ட சத்தி மகற்களிக் கச்சூர் மடித்தகந்த
வேள்கொண்ட வேலை விடாதுள்வார்க் கில்லை வினைவயமே
ஆதியான புருஷனாய் மூலமான ப்ரக்ருதியா
யன்புடைத்த தாயுமா யறிவளிக்குந் தந்தையாய்
தாதுவைந்தி னூடதா யாவுமாக பரவினாய்ச்
சாகரத்தி லுழன்றிடு நாதியற்ற ஜீவர்க்குக்
கோதிலாத கலமதாய் வழிநடத்திக் காத்திடுங்
கேடுசெய்யு மகிடனைக் கொன்றதுர்க்கை தேவியே
வேதாநான்கு போற்றிடு மீடிலாத வொருவளுன்
வீழ்விலாத வெற்றியை யெண்ணியேத்த லின்பமே
வெங்கட் பணியணை வேலை துயில்கூரும்
வங்கக் கடல்கடைந்த மாதவனை - யெங்கட்
கிறைவனை யெந்நாளு மேத்துவார்க் குண்டே
நிறைவள நீள்பிரசன் னா
சூதொரு பாகங் களவொரு பாகந் துணையிருக்க
வாதொரு பாக மதமொரு பாக மதிமறைக்க
யாதொரு கால மமையப் பெறுமோ வவனருளான்
மாதொரு பாகன் மலரடி நீழன் மகத்தடைவே
மூன்றினங்கள் கொண்டநாம முருகநாம மென்பது
மூன்றுநான்கு கரமுடைத்த னுயிரெழுத்தை யொக்கவே
மூன்றிரண்டு முகங்கள்சேர மெய்யெழுத்துந் தோன்றிட
மூன்றுபுள்ளி யாய்தமாக தமிழுடைத்த வேலனே
வேலு மயிலு மிணைந்து மகிழ்திகழ்
வேலா விடிவுணர்த்துஞ் சேவலெங்கே - கோல
நிழற்க ணிகிரிலா நிற்கு முருவே
யுழலு முயிர்க்குத் துணை
கண்ண னன்ன கட்டக் களியாட்ட
மெண்ண வெண்ண சொட்டு மவன்மாயை
யுண்ண வுண்ண வோயா சுவைநாளு
மண்ணி யென்னை யாட்கொள் வரம்பற்றே
மால்செய்ய வல்ல மணிவண்ணன் சாகசம்
போல்செய்ய வல்லாப் புகழுடைத்தா - நூல்சொல்ல
வோயா வடிவுடையா னுள்ளங் கவர்கள்வன்
மாயைக் குளதோ வரம்பு
பதினாறு கலையு மானவளே
பதியடைய பாதை யானவளே
விதிநால்வர்க் கன்னை யானவளே
விழைவார்க்கு வெல்லம் போன்றவளே
நிதியாள்வட் கருளை யீந்தவளே
நிசவாக்கி னீங்கா நிற்பவளே
துதியாண்மை தூய்மை யீந்தவளே
சுகமாளுந் தாயே காமாட்சீ
சீர் பிரித்து :-
பதினாறு கலையும் ஆனவளே பதி அடைய பாதை ஆனவளே
விதி நால்வர்க்கு அன்னை ஆனவளே விழைவார்க்கு வெல்லம் போன்றவளே
நிதியாள்வள் கு அருளை ஈந்தவளே நிச வாக்கின் நீங்கா நிற்பவளே
துதி ஆண்மை தூய்மை ஈந்தவளே சுகம் ஆளும் தாயே காமாட்சீ
பதினாறு கலையும் (ஶோடசி) ஆனவள் நீ, பதியை அடைய பாதையும் நீயே தான், நான்முகன் முதலிய ஐவர்க்கும் தாயானவள் நீ தான், உன்னையே விரும்புவார்க்கு நீ என்றும் திகட்டா இனிப்பின் சுவை, நிதிக்கிறைவியான திருமகளுக்கு அருள் தந்தவள் நீ, சத்தியத்தில் என்றும் நீங்கா நிற்பவள் நீ, உன்னைத் துதிக்க தூய்மையும் ஆளுமையும் தந்தவளும் நீயே தான் அம்மா சுகத்தை ஆளும் காமாக்ஷி
You are the form of sixteen kalas, you are the path to attain Pathi(Lord Shiva), you are the mother of Trimurthis, Maheswara and SadaShiva, you unending sweetness to your devotees, you graced Mahalakshmi and you are the unmistakable form of Satya/Truth, You granted me the purity and ability to sing your praises Oh Mother Kamakshi!
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி