கற்றுத் தெளிந்தபல காவியத்தின் சாரத்தைக்
கற்றுக் கறவை கறந்த கனியமுதை
முற்று மறிந்த முகுந்தனை மோகனனை
நெற்றித் திரள திருமணணி வேந்தனை
முற்றுந் துறந்து முழுமனதோ டேற்றுவந்து
வெற்றித் தமிழ்மணம் வீற்றிரு மாலையைப்
பெற்றுப் புகழ்தரும் பேதைசொல் பாவையை
உற்றுப் பணிவோம் உகந்தேலோ ரெம்பாவாய்