வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்றி யுன்னைவேண்ட வொப்பிலாத பாவையே
வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்றி யுன்னைவேண்ட வொப்பிலாத பாவையே
ஆறடுக்கு நேமியெறி யாறுடுத்து நாதனைத்
தீரணைத்து நீமணக்க மூலமான வுந்துநீ
யேறடுக்கு நேரநின்ற சிக்கலான மும்முடி
சீரமைக்கக் கட்டவிழ்க்க மூலமான வாற்றனீ
நூறடுக்கு மாடியேறி யுச்சிகாணு வெற்றிபோ
லாறுமாறு மாகிநின்ற வந்தரத்தி லாழ்ந்துனைக்
கூறொடுக்கிக் காலடக்கிக் கன்னியுன்னைக் காணவுங்
கோதிலாத வுன்றனாற்றல் கூடநிற்க வேண்டுமே
இரவுமாகிப் பகலுமாகி யிறைவனாகி யிறைவியா
யுருவமாகி யருவமாகி விரவிநின்ற யாதுமாய்க்
கருவுமாகிக் கதியுமாகிக் கனியதோடு காயுமா
யொருவளான வுயர்வையெண்ன வுணர்வளித்த ளென்கொலோ
தூமலராள் கேள்வனையே தோத்திரங்கள் செய்திடுவார் நாமலந்த சொல்லெலா நான்மறையே - நாமறந்து போனாலு நாரணனைப் புந்தி யமர்த்திடுவார் தேனாளும் வாக்காற் சிறந்து
அறியாப் பிழையை யறுத்தெறியு மாறே முறைகாட்டு மூவா முருகா - கறைக்கண்டர்க் காசானே ஞானத் தடிச்சுவடே நின்னருளா னீசனும் வாழ்வே னிறைந்து
ஞாலங்கள் யாவு நகைத்தருளு மாங்குறையுங்
காலங்கள் யாவுமவள் கண்ணழகு - கோலங்கொ
ணாடெங்கு வீற்றருளு நாயகியி னேமியெனத்
தாடங்கந் தாங்கு செவி
உலகாளுந் தேவியி னுக்கிர ரூபம்
பலகாலம் பத்தர்க்குப் பாங்காய்ச் - சலமாளுஞ்
சங்கரர் கோவிலிற் சக்கரந் தோடேற்றிச்
சங்கரர் தான்றணித்தார் சீர்
முருகா குமரா குகனென் றழைவார்க்
கிருதா ளலர்சே ரிசைவைத் தருமே
பருகா துனையே பழுதைம் புலனே
னுருகா துணர்வாழ்ந் துளதே னுளமே
கூகாக்கைக் காகாக்கை கோகாக்கைக் காகாக்கை
கூகைக்கை காகாக்கைக் காகாக்கோக் - கீகாகைக்
கூக்கை குகக்கோகைக் கீகை கககக்கோ
காக்கைக்கூ கோக்கோக் ககா
கூமடியமர் தீயவுணனின் றூசிறுவனு மழைக்கக்
கோமடியதன் கூர்நகமெடு சேகுருதியி னனைத்த
மாமடியமர் மாதுணையிர வாழ்வினிலிடர் வருமோ
சாமடியம ராவிடிவுறச் சார்விவளடி பிடியே
அமர்சத்தி கோலங் காணின்
அவள்பாதம் மதியின் ஒளியாம்
தமர்க்கொருவர் தீங்கு செய்யின்
கணந்தோன்றி தூண்பிறந்து மடி
அமர்த்திக் கோனூன் பிளந்த
அரிக்கிதயம் மதியின் ஒளியாம்
நமர்சித்த லிங்கம் காணீர்
நடுப்பாதி மதியின் ஒளியே
சேவிக்கக் காமாட்சி சீர்பாதந் தந்தருள்வாள்
பாவிக்கும் பாரபட்சம் பார்க்காத பாங்கினளா
மாவிக்கு முள்ளொளிரு மக்கினியா மம்பிகையைப்
பாவிக்கப் பத்துமோ வாழ்வு
மருந்தேச் சுரர்க்கு மருந்தாய்த் திகழுந்
திருந்து திரிபுர சுந்தரி தாயார்
பொருந்து புதல்வர் புடைசூழ நிற்கும்
விருந்தை விழியா லருந்து
இரவும் பகலு நிலவுங் கதிரு மெனவிரண்டு
பரவு மொழியும் புழங்கி யுளதே பலசமயங்
கரவுங் கபடுங் கயவ ருரையாற் கதைவளர்ந்த
புரையை விடுவோம் வடதென் மொழியும் பழபிணைப்பே
அயன்மொழி வேண்டா வியன்மொழி வேண்டும்
பயன்மொழி வேண்டா நயன்மொழி வேண்டுஞ்
செயன்மொழி வேண்டா மயன்மொழி வேண்டு
மிகன்மொழி வேண்டா விசைமொழி வேண்டு
மயன்மொழி விண்டா வுடன்சிறை வைத்த
குயின்மொழி வேண்டு மையன்மொழி தான்டா
கயல்விழி பாண்டி கனிவள நாட்டி
னுயிர்மொழி யென்றே யுயர்ர்த்தியே கூறே
அயன்மொழி நன்கறிந் தன்னைமொழி கல்லா வியன்மொழி கேட்டால் விரைந்து - குயின்மொழி வள்ளியமை நாதன் மயிலேறி வந்திங்குத் தள்ளியெமை வைப்பான் றனித்து
கைப்பேசி தானுலகாய்க் காணுஞ் சமயமிது
பொய்ப்பேசு மாந்தர் புகலிடமு மஃதேதான்
மைப்பூசு மாதர்க்குத் தூண்டிலு மங்கேதான்
கைப்பாவை யானோங் கலிக்கென் றுணராம
லுய்ப்பாதை தேடி யுணர்வுருகித் தேம்பாமன்
மெய்ப்பார்வை வேண்டிவடி வேலனைப் பாடாமன்
மாப்பாடு பட்டுழன்று மன்னிப்பு நாடாமற்
கூப்பாடு போடுமெங் குற்றங் களைந்திட்டுத்
தைப்பூசச் சேந்தா திருத்து
வைப்பேது மில்லாது வையத்தில் வந்திழிந்த
கைப்பாவை நாமென்று கண்டுணர்ந்து - தைப்பூச
நாயகனைத் தப்பாம னாளுந் தொழுமனனே
போயகலப் பொல்லா வினை
மூன்றுலோக மாழ்ந்துபார்க்கு மூரலிந்த மூரலே கான்றுநின்ற நாதரன்பு காதலித்த மூரலே யான்றதேவர் மூவரேத்து மருளளிக்கு மூரலே யீன்றதாயி னழகுகாண வென்கொடுத்து வைத்தமே
மாவமர்ந்த மார்புடைத்த மாசிலாத நேமியாய்
நாவமர்ந்து நல்லருள்ள ஞான்றுஞான்று போற்றுவார்
பூவமர்ந்த வாறுபாத மாக்கமென்ன மேன்மையா
யாவிவந்த சங்குநாத மாட்சிகூற லாகுமே
#கலிவிருத்தம்
தூயாயாமா மாநேயாசே யாதாயாயா நேமீமாயா
யாமாமீநே யாயாதாயா சேயாநேமா மாயாயாதூ
#மாலைமாற்று #palindrome
மன்மதற்கு ரூபமீட்டு மாண்பளித்த தேவிநீ
சண்மதற்கு மூலாமான சார்வளிக்குஞ் சாட்சியா
கன்மமற்று வாழ்வுதோறுங் கன்னியுன்னை யேத்திட
வென்மனத்த மர்ந்திருந்தி யக்கிவைக்கு மன்னையே
#கலிவிருத்தம்
அரிமா வரிவை மகிழ்ந்தே யருளக்
கரிமா லிராவணனைக் கொன்றான் - செருமா
களத்திற் சரமாய்க் கலந்து நவநா
டுளைத்துப் பிளந்தா ளுடல்
அகாலமாக விருந்தபோது மன்பிலாழ்ந்த பூசனை
சுகாலமாக சீரமைக்குந் துர்க்கைதேவி கருணையால்
விகாரமற்ற தேவதேவன் ரகுகுலத்து மேன்மையன்
சிகாரமெட்டு மாறுரைத்த செய்திதேர்ந்துய் யுள்ளமே
#கலிவிருத்தம்
மாதூதாவா னாதாதீதே காராமாதா சாவாகாவா
வாகாவாசா தாமாராகா தேதீதானா வாதாதூமா
#மாலைமாற்று
மாதர்தம்மை மோகமுற்று மாவியந்த நாளுள
மாதர்தம்மை ஏதமென்று மாவெறுத்த நாளுள
வீதிரண்டு மாயையென்றி றைவிசொல்லச் சித்தமே
நாதர்தம்மை யாகங்கொண்ட நாயகிக்க ணின்றதே
அரவுதிங்க ணதியணிந்த வழகனாரின் பாதியே
யிரவிதிங்கள் விழிகளான விணையிலாத வாதியே
நரவிலங்கு நகமுதிக்க நகைநகைத்த தாயுனைப்
பரவிநங்கள் பிணிவிலக்கிப் பதுமபாதஞ் சேர்வமே
குவலயத்து மறையமர்ந்த திருபுரத்து வாசினி
யவமகற்றி யருளளிக்கு முடிவிலாத மோகினி
தவமியற்று சிவலயற்கு நயந்தருளு காமினி
உவமையற்று மொழிதவிக்கு நிகிரிலாத நீபையே
#அம்பாள்
ஏழடுக்கு நிறமுடைத்த வொளிபடைத்த வெல்லவன்
பாழடக்கு மிருளகற்றிப் பரிமளிக்கும் பாங்கென
வூழொடுக்கு வினையடக்கு முடலெடுக்கு முயிரினை
வாழ்வொடுக்கி வீடுகாண வழியமைக்கும் வேலனே
பரங்குன்றம் வாழும் பரமனின் குன்றம்
அறங்குன்று பாவ மழிக்கவல்ல குன்றம்
உரங்குன்றச் சூர னுருவழித்த கந்தன்
கரங்கொண்டு மாலை திருக்கிட்ட குன்றம்
நறுங்குழன் மாதர் நடமாடு குன்றம்
மறங்கொண்ட மாந்தர் மிகவிரும்பு குன்றம்
சிரங்குன்றிப் பத்தர் தினந்தொழுங் குன்றம்
இரங்கிநின்று வேல னிசைவிக்குங் குன்றம்
வரந்தந்து வள்ள லிளைப்பாறு குன்றம்
திரங்கொண்டு யாவுந் திருவுள்ளத் தேர்வால்
வருங்காலம் வாராது வம்பு
போரினின்ற பார்த்தனுய்யப் பாங்களித்த போதனை
பாரினின்ற பாரநீங்கப் போரமைத்த வாளுமை
தேரினின்று தேர்ந்தளித்த போரைவெல்லு சிந்தனை
யோரநின்ற வுள்ளமென்று முத்தமன்வாழ் கோவிலே
காம(ர்)மேனி கருகவைக்கக் கண்திறந்த நாதர்க்குங்
காமமேனி பெருகவைக்கக் கண்மலர்ந்த தேவியுன்
சேமமேனி யருகிருக்க நாமமேது வாழ்விலே
வாமமேனி யுருவெடுத்த வாலைகாஅ மாட்சியே
வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்ற...